- Sunday
- August 2nd, 2026
சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் ஐவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பிரதான சந்தேகநபரின் அலைபேசியிலிருந்து உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி,...
தொடர் எதிர்ப்புகள் காரணமாக, இலங்கையில் நடைபெறவிருந்த தன்னுடைய இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் ரத்து செய்திருக்கிறார். நெஞ்சே எழு என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வருகின்ற 23ம் தேதி இலங்கையில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இலங்கையில் முதன்முறையாக ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என இதற்காக விளம்பரங்களும் செய்யப்பட்டன....
வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் ஒட்டகப்புலம், வறுத்தலைவிளான் பிரதேசங்களை முழுமையாகவும் காங்கேசன்துறையில் சில பகுதிகளையும் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு விடுவிக்க இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. இப்பகுதிகளை விடுவிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பணிகள் முடிவடைந்ததும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகும் என தெல்லிப்பழை பிரதேச செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. மேலும் கடந்த வாரம்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும், மீண்டும் தலைதூக்காது. தமிழ் மக்கள், ஒருபோதும் மீண்டுமொரு யுத்தத்துக்குள் தள்ளப்பட மாட்டார்கள். தெற்கைச் சேர்ந்த சில அரசியல் சக்திகளுக்கே, யுத்தமொன்றின் தேவை அவசியமாகியுள்ளது' என்று வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கடந்த...
பொருத்து வீட்டுத் திட்டப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், மீளாய்வின் பின்னர் அது தொடர்பில் முடிவெடுக்கலாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடைபெற்றது. இதன்போது பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த வீட்டுத் திட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்புக்கள் வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில்...
விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர். வொஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கமே (International...
ஆனைக்கோட்டை கூழாவடியில் தனியாருக்குச் சொந்தமான 16 பரப்புக் காணியை இராணுவ முகாம் அமைப்பதற்காகச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அந்தக் காணியை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை வருகை தரவுள்ளதாகக் காணி உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு மாகாண முதலமைச்சர்...
வட மாகாணசபை அமைச்சர்கள் அனைவரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரும் மனுவில், இதுவரை 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் 4 அமைச்சர்கள் நீங்கலாக மொத்தம் 24 உறுப்பினர்கள் இதில் கையெழுத்திடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைப் பொருளாளரும், வடமாகாண சபை பிரதி...
"ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்படுவது சர்வசாதாரண விடயம். ஆனால், சாவகச்சேரி சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், தமிழரின் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்கப் போகின்றது என்றும் தெற்கில் உள்ள சிலர் ஊளையிடுகின்றனர். இது வேடிக்கையானது. மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடி உரிமைகளைப் பெறவே...
2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப்போரில் வீரச்சாவடைந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை புதைக்கப்பட்டது என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறீலங்கா இராணுவத்தளபதியாக இருந்தவரும் தற்போதைய அரசாங்கத்தால் இராஜதந்திரியாக நியமிக்கப்பட்டவருமான மேஜர் ஜெனரல் தயாரத்நாயக்கா அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்குகையில் போரில் வீரமரணமடைந்த பொட்டம்மான் மற்றும் பிரபாகரன் ஆகியோரின் உடல்கள் எரிக்கப்பட்டு சாம்பல்...
யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் 5 கிராமங்களில் பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்கள், விவசாய நிலங்கள், கடற்றொழில் செய்யும் பகுதிகள் உள்ளடங்கலாக பெருமளவு நிலத்தை வன ஜீவராசிகள் திணைக்களம் அடாத்தாக எல்லையிட்டு தேசிய பூங்காவாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்தியிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் சுண்டிக்குளம், போக்கறுப்பு, முள்ளியான், கட்டைக்காடு, நித்தியவெட்டை ஆகிய...
தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களுடன் சாவகச்சேரி பிரதேசத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி சந்தேநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, முக்கிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், கைப்பற்றப்பட்ட...
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை வழங்க, கடற்படையின் சிரேஷ்ட புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை, பாடசாலை மாணவர்களை கடத்தி சென்று கொலை செய்தமை மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல குற்றங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ஆயுத்தமாக...
நீர்வேலி தெற்கில் வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த தாக்குலினால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுமார் 10 பேர் கொண்ட இளைஞர் குழு குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டு உரிமையாளரை பொல்...
ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கண்மூடித் தனமாகத் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.தாக்குதலில் காயமடைந்த 7 தமிழ் மாணவர்கள் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களை உதவிக்கு அழைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது. தாக்குதலைத் தொடர்ந்து 2 ஆம் வருட மாணவர்களுக்கான விடுதிகள் மூடப்பட்டு அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறு...
மன்னாரில் மீண்டும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளதாக கவலையடைந்துள்ளனர். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு முன்பாக குறித்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வருகின்றது. யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகுட்பட்ட மறவன்புலோ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள மீட்கப்பட்டுள்ளமை மற்றும் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட...
ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கண்மூடித் தனமாகத் கொலைவெறித் தாக்குதல் நடாத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 7 தமிழ் மாணவர்கள் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் அளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களை உதவிக்கு அழைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து இணங்காணப்பட்ட மேலும் சில பகுதிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கான விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியினை அண்மித்த பகுதிகள் குறிப்பாக நடேஸ்வராக் கனிஸ்ர வித்தியாலையத்தின் பின்புறத்தில் இருந்து இராணுவத்தின் தல்சவென கோட்டல் வரையிலான சில பகுதிகள் விடுவிப்பதற்கு படைத்தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது. முன்பு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள படை முகாம்களை...
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்துக்குச் சொந்தமான காணியின் பின் பகுதியில் இருந்து, ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்தனர். 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், குறித்த கமநல சேவைகள் நிலையத்துக்கு சொந்தமான காணியில் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையம் இயங்கிவந்தது....
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் உட்பட ஆயுதங்கள் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றப்பட்டு உள்ளன.குறித்த வீட்டில் இருந்த நபர் தப்பி சென்று இருந்த நிலையில் கிளிநொச்சி வன்னேரி பகுதியில் வைத்து இன்று மதியம் கிளிநொச்சி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த வீட்டினுள் போதைப்...
Loading posts...
All posts loaded
No more posts
