பாணின் விலை அதிகரிப்பு

450 கிராம் பாணின் விலையை நான்கு ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு பூர்த்தியடையும்

தமிழ் மக்கள் பேரவை தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தீர்வுத்திட்ட வரைபை முழுமையாக்குமெனவும், அதன் பின்னர் அரசாங்கத்திற்கு கையளிக்கும் எனவும் பேரவையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த விடயம்...
Ad Widget

ஆண்ட இனம் அதிகாரப் பகிர்வு கேட்பதில் என்ன தப்பு? மு.காவின் தேசிய மாநாட்டில் சம்பந்தன்

"நாம் இந்த நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். அதனடிப்படையில், தமிழீழம் கேட்பதற்கான உரிமை எமக்குண்டு. அதனடிப்படையிலேயே ஒரு காலத்தில் நாம் தனித் தமிழீழத்தைக் கேட்டோம். இன்று ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம். இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வைக் கேட்டதும் தமிழ் மக்களே. அதிகாரப் பகிர்வை பெரும்பான்மை மக்களும் கேட்கவில்லை முஸ்லிம் மக்களும் கேட்கவில்லை....

புனர்வாழ்வு கோரி சட்டமா அதிபர், ஜனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகள் கடிதம்

புனர்வாழ்வு வழங்குமாறு வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் நேற்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவார் என எதிர்பார்த்ததாகவும், அவ்வாறன சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினால் தாம் புனர்வாழ்வு என்ற முடிவிற்கு வந்துள்ளதாகவும் தமிழ்...

பிரபா, பொட்டம்மான் குறித்து விசாரணைகளை நடத்தி உண்மையைக் கண்டறிவோம்! அரசாங்கம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறியும் பணிகளை மேற்கொள்வோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ச்சியாக பல கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், அரசாங்கம் இந்த...

வித்தியா கொலை வழக்கில் குடும்பத்தினர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு ஒரு சில மாதங்களில் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றில்...

வித்தியா படுகொலை: நேரில் கண்ட சாட்சியங்களால் பரபரப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளது.மிக விரைவில் சாட்சியின் சாட்சியம் மன்றில் பதிவு செய்யப்படும் என்று குற்ற்ப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது மன்றில் தோன்றிய குற்றபுலனாய்வு பிரிவினர்...

யாழ். வீடமைப்பு மோசடி குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார் அமைச்சர் ஹிஸ்புல்லா

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டப் பணிகளில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு நியாயமானது என்று மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். உலோகத்தில் அமைக்கப்படும் வீடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அறிக்கை ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியிருப்பதாகவும் அவர் ஐ.பி.சி...

உயர்பாதுகாப்பு வலய எல்லையை ஒரு கிலோ மீற்றர் தூரம் பின்னகர்த்தும் இராணுவத்தினர்!

வலி.வடக்கில் ஒரு தொகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து உயர்பாதுகாப்பு வலைய எல்லையினை சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் பின்னகர்த்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள இராணுவத்தின் ஹொட்டல் மற்றும் துறைமுகங்களுக்குச் செல்பவர்களினை சோதனையிடும் சோதனைச்சாவடியும் இதன் போது பின்னகர்த்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள...

தப்ப முயன்ற பொட்டு அம்மானுக்கு என்ன நடந்தது எனத் தெரியாது!-பொன்சேகா!!

இறுதி யுத்தம் நடந்த சமயம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் சிலருடன் தப்ப முயன்றனர். 2009 மே 17 ஆம் திகதி வடக்கு நந்திக்கடலூடாகத் தப்ப முயன்ற இவர்களில் பிரபாகரனும் மற்றவர்களும் திரும்பி யுத்த களத்துக்கு வந்தனர். ஆனால் பொட்டு அம்மான் வரவில்லை. இந்த விடயத்தை கே.பி....

சிங்கப்பூர் வீடுகள் வடக்கிற்கு பொருத்தமுமில்லை, அவசியமுமில்லை!

21இலட்சம் வீட்டிற்கு பலத்த எதிர்ப்பு உண்டு. மக்களை பொறுத்த வரையில் இந்த வீட்டின் சூழல் நிலையை எங்களுடைய மக்கள் முழுமையாக பார்க்கும் போது அதனை ஏற்கமுடியாது. வீடில்லாத குடும்பத்திற்கு இந்த வீட்டைக் கையளித்து ரி.வி, கட்டில் கொடுத்தால் சரி என்று சொல்லக்கூடும். ஆனால் சமுதாயத்தில் என்ன நடக்கும். ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுத்தும் நிலையை தோற்றுவிக்கும். என...

கிளிநொச்சியில் 3 மாணவர்களைக் காணவில்லை

கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவரைக் காணவில்லை என, அம்மாணவர்களது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற மேற்படி மூன்று மாணவர்களும், நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களால் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனையடுத்தே, சம்பவம்...

இந்திய அதிகாரிகள் குழு பலாலி விமானநிலையத்தில் ஆய்வு!!

பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து அதிகாரிகள் குழுவொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. அண்மையில் பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பில் இந்திய – இலங்கை ஆணைக்குழுத் திட்டத்தில் இணக்கம் காணப்பட்டு அதன்படி விரைவில் இதுதொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து குழுவொன்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே இக்குழுவினர் நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்ததாகவும்,...

ஈழத் தமிழர் காலைகளை முறித்த காவல் அதிகாரி!

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் சுபேந்திரன் என்னும் ஈழத்தமிழ் அகதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறான் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல் துறை ஆய்வாளரும் உடன் இருந்த காவலர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தை நம்பி தஞ்சம்...

கிரிக்கட் வீரர் கொலை வழக்கு: 3 எதிரிகளுக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை! ஏழாம் எதிரிக்கு சர்வதேச பிடிவிறாந்து!!

யாழ்ப்பாணம் செங்குந்தா மைதான கிரிக்கட் வீரர் கிறிஸ்தோபர் பிரேமன் கொலை வழக்கில் 3 எதிரிகளுக்கு தலா 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தபட்ட ஏழு எதிரிகளில் முதலாம், இரண்டாம், ஏழாம் எதிரிகளான அருளானந்தம் சோபஸ், இராஜகுலேந்திரன் நிசாந்தன், உமாகாந்தன் கிரிகேசன் ஆகிய மூவருக்குமே இவ்வாறு...

பொட்டு அம்மான் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளராக கடமையாற்றி வந்த சண்முகலிங்கம் சிவசங்கர் எனப்படும் பொட்டு அம்மான் தமிழகத்தில் மறைந்து வாழ்ந்து வருவதாக திவயினவில் கீர்த்தி வர்ணகுல சூரிய தகவல் வெளியிட்டுள்ளார். மனைவி, பிள்ளையுடன் தமிழகத்தில் பொட்டு அம்மான் மறைந்து வாழ்ந்து வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொட்டு அம்மான், 'குருட்டீ' என்ற பெயரில் தமிழகத்தில் வாழ்ந்து...

கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம்!

கடல் அட்டை வளர்ப்புப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி, பூநகரி, பிதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி இலவன்குளம் பகுதியில் நேற்று முதல் இக்குடும்பத்தினர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்த தமது தொழிலில் ஈடுபடும் பகுதியில் கடல் அட்டை வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட்டுள்ளமையால் தமது வாழ்வாதாரம்...

வட மாகாணத்தில் பாலியல் லஞ்சம் கோரும் தமிழ் அரச அதிகாரிகள்! சந்திரிக்கா குற்றச்சாட்டு

வட மாகாணத்தில் கணவனை இழந்த இளம் பெண்களிடம் இராணுவம் மட்டுமன்றி தமிழ் அரச ஊழியர்களும் பாலியல் இலஞ்சம் கோருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஊடகவிலாளர்களை தெளிவூட்டும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நீண்டகாலமாக...

ஊழலிலும் ஒழுங்கீனமான செயலிலும் ஈடுபட எவரையும் ஈடுபட அனுமதிக்க மாட்டோம்- சுமந்திரன்

வடக்கு, கிழக்கில் வீட்டுத் திட்டத்தை சாட்டாகப் பயன்படுத்தி ஊழலிலும் ஒழுங்கீனமான செயலிலும் ஈடுபட எவரையும் ஈடுபட அனுமதிக்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சால் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மாதிரிக்காக 2 வீடுகள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட நிலையில்...

யாழ். இந்துவின் கௌரவத்தைக் கெடுக்கும் ரவுடிகளை உடன் கைது செய்யுங்கள்!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மிகச் சிறந்த கல்விக் களஞ்சியம். ரவுடிக் கும்பல்கள் அதன் கௌரவத்தைக் கெடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். இத்தகைய ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர் குழுக்கள், பழைய மாணவர் குழுக்களை இனங்கண்டு, உடனடியாகக் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள...
Loading posts...

All posts loaded

No more posts