அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் இன்று மாபெரும் போராட்டம்!

நீண்டகாலமாக விசாரணைகளின்றி மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி இன்று ஒன்பதாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறான நிலையில் அவர்களின் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையிலும் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது....

ஊடகவியலாளர் மாத்தியூ லீயிற்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்

ஐ.நா. அமைப்பின் இன்னர் சிட்டி பிரேஸ் என்ற இணையத்தின் சர்வதேச ஊடகவியாளர் மாத்தியூ லீ ஐ.நா அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமையை கண்டித்து இன்று யாழ் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. காணாமல் போனோரின்...
Ad Widget

கீரிமலையில் தேவாலய காணி சுவீகரிக்கப்படவுள்ளது!

கீரிமலை, வலித்தூண்டல் பகுதியில் அமைந்துள்ள சென்.ஆன்ஸ் தேவாலயத்தின் 4 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக, நிலஅளவை செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட நிலஅளவையாளர் பி.சிவநந்தன் அறிவித்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே - 222 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள காணியே இவ்வாறு நிலஅளவை செய்யப்படவுள்ளது....

வித்தியா படுகொலை: மேலும் இருவர் கைது!

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்களை கொழும்பிலிருந்த வந்த குற்றப்புலனாய்வு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன், தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம்...

மகஸின் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவுங்கள்!

"கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் உதவவேண்டும்.'' - இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14...

கணவர் இன்றி துன்பத்துடன் வாழ்கின்றோம் – அரசியல் கைதியின் மனைவி வேதனை

நல்லாட்சி அரசாங்கம் தனது கணவரையும் ஏனைய அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வின் ஊடாகவோ அல்லது பொது மன்னிப்பின் அடிப்படையிலேயோ, விடுதலை செய்ய வேண்டுமென, மகஸின் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதி ஒருவரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2009ம் ஊனமுற்ற...

 தமிழ் கைதிகள் 63பேர் உண்ணாவிரதம்

வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 63பேர், இன்று காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு எதிரான வழக்கை துரிதப்படுத்தி விடுதலைக்கு வழிசமைக்குமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர். ஏற்கெனவே,...

பாடசாலையில் தஞ்சம் அடைந்த 65 இளைஞர், யுவதிகளை இராணுவம் பிடித்தது! ஒருவர்கூட வீடு திரும்பவில்லை!!

'யுத்தத்தால் இடம்பெயர்ந்து மண்கும்பான் தமிழ் மகா வித்தியாலயத்தில் தஞ்சமடைந்திருந்த குடும்பங்களில் இருந்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட 65 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளில் ஒருவர் கூட இதுவரை வீடு திரும்பவில்லை' என இந்தச் சம்பவத்தில் தனது இரண்டு மகன்களை பறிகொடுத்த தந்தை ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்தார். காணாமற்போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி...

மகஸின் சிறை கைதிகளின் போராட்டம் தொடர்கிறது! ஆதரவாக சக கைதிகள் உண்ணாவிரதம்!

நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்துவைத்திருக்கும் தம்மை விடுதலைசெய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கொழும்பு, மகஸின் சிறைச்சாலையின் 14 தமிழ் அரசியல் கைதிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வடைந்த நிலையிலும் இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தைத் தொடர்கின்றனர். இந்தக் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மகஸின் சிறைச்சாலையிலுள்ள ஏனைய 75 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று திங்கட்கிழமை ஒரு நாள்...

தீவகத்தில் காணாமற்போனவர்கள் மண்டைதீவு கிணறுகளில் போடப்பட்டனர்!

யாழ்.தீவக பகுதிகளில் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்ப்பட்டு மண்டைதீவுப் பகுதியில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டிருக்கலாம். ஒரு கிணறு தோண்டப்பட்டபோது 85 மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன மற்றைய கிணறுகளை தோண்டுவதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது. அவற்றையும் தோண்டுங்கள் பல உன்மைகள் தெரியும். மேற்கண்டவாறு காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வேலுப்பிள்ளை பேரின்பநாயம் என்பவர்...

தீவகத்தில் பலர் காணாமல் போக கடற்படையும் ஈ.பி.டி.பியுமே காரணம்!

தீவகத்தில் பல இளைஞர், யுவதிகள் காணாமற் போனமைக்கு கடற்படையினரும் ஈ.பி.டிபியினருமே காரணம் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் காணாமற்போனோரின் உறவினர்கள் பலரும் ஆதாரங்களுடன் தமது சாட்சியங்களைப் பதிவு செய்தனர். காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் வேலணை பிரதேச செயலகத்தில் நேற்று நடந்தன. இதில் சாட்சியமளிப்பதற்காக 193 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு...

தாஜுதீன் படுகொலையின் பிரதான சூத்திரதாரி நாமல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவின் பூரண ஒத்துழைப்புடனேயே பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு சாட்சியங்கள் கிடைத்துள்ளன எனவும், அந்தக் கோணத்தில் புலன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் வட்டாரங்கள்...

இராணுவமும் ஈ.பி.டி.பியுமே எனது மகனை கடத்தியது! கண்ணீர் மல்க தாயார் சாட்சியம்

'இராணுவத்தினருடன் வந்த ஈ.பி.டி.பியினர் கடத்திச் சென்ற எனது மகனை கடற்படையின் சீருடையுடன் எனது உறவினர்கள் பலரும் கண்டுள்ளனர்.' இவ்வாறு காணாமல் போன நபரான நீர்வேலி வடக்கைச் சேர்ந்த அச்சுதன் வைகுந்தன் என்பவரின் தாயார் அருந்ததி காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி...

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவி மீது தாக்குதல்!!

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவி நேற்று பிற்பகல் இனந்தெரியாத இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ் பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற இத் தாக்குதலில் மாணவி அப்பகுதியில் டெனிம் மற்றும் ரீசேட்டுடன் சென்று கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது. மாணவி பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து உடனடியாக அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டு...

வியத்தகு சாதனை புரிந்த இலங்கை மருத்துவர்கள்!!

பிறப்பிலே முள்ளந்தண்டு வளைந்திருந்த பாடசாலை மாணவனை சத்திர சிகிச்சையின் மூலம் மீண்டும் சாதாரண நிலைமைக்கு கொண்டு வந்து சாதனை புரிந்துள்ளனர் இலங்கை மருத்துவர்கள். காலி கரம்பிடிய வைத்தியச்சாலையிலே இந்த சத்திரசிகிச்சை மேல்கொள்ளபட்டுள்ளது. இரண்டு கட்டமாக நடந்த இந்த சத்திரசிகிச்சையின் பின் குறிந்த மாணவனுக்கு வழங்கப்பட்ட விஷேட மருத்துவ உடையின் உதவியுடன் நிமிர்ந்து சாதாரண மனிதர்களை போல்...

வலி. வடக்கு மக்கள் மீள்குடியமர்வை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்!

வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழ்கின்ற மக்கள் தங்களைச் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடாத்துவதெனத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று முற்பகல்-11 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணி வரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமின் மகாதேவன் பொதுமண்டபத்தில் நலன்புரி நிலையங்களின் பொது நிர்வாகக் குழுத்தலைவர் எஸ். அன்ரனிக் குயின் தலைமையில்...

ரவிராஜை கொல்ல 5 கோடி ரூபா! கருணா குழுவுக்கு வழங்கினராம் கோட்டா!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை கொல்ல கோட்டாபய ராஜபக்‌ஷவால் 5 கோடி ரூபா கருணா குழுவுக்குக் கூலியாக வழங்கப்பட்டதாக புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி லியனாச்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் நேற்று இதனைக் குறிப்பிட்டார். இந்த கொலை கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு...

காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் அமர்வு இன்று கோப்பாயில்!

காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று தொடக்கம் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் மார்கழி மாதம் இவ் அமர்வுகளின் இரண்டாம் கட்ட விசாரணைகள் இடம்பெற்றிருந்த நிலையில் அதன்போது யாழ் மாவட்டத்தில் இடம்பெறாத பிரதேச செயலக பிரிவுகளில் இவ் அமர்வுகள் இடம்பெறவுள்ளது. அந்தவகையில்...

வடக்கில் இராணுவ முகாம்கள் படிப்படியாக அகற்றப்படும்- ஆளுநர் ரெஜினோல்ட் குரே

வடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற உறுதிமொழியை வடமாகாணத்திற்காக புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கியுள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூஜை வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்படி உறுதிமொழியை வழங்கினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும்...

நன்னீர்த் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனக் கூறி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் என்பன இன்று வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றது. வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர்கள் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டிலும், வடமராட்சி அபிவிருத்தி ஒன்றியம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
Loading posts...

All posts loaded

No more posts