Ad Widget

யாழ்ப்பாணத்தில் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் நாளை மீண்டும் காணி சுவீகரிப்பிற்கு நில அளவை

யாழ் மாவட்டத்தில் கடும் எதிர்ப்புக்களின் மத்தியில் நாளை செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான நில அளவை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களின்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தும் காணி அளவிடும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த ஆட்சியில் யாழ் மாவட்டத்தில் மாத்திரமல்லாமல் ஏனைய வடக்கு மாகாணங்களிலும் இராணுவத்தின் தேவைக்காக காணி சுவீகரிப்பு இடம்பெற்றது.

இந்த நிலையில் வலி.வடக்கு சேந்தான்குளம் பகுதியில் தேவாலயத்திற்கு சொந்தமான 4 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைகளுக்காக சுவீகரிக்கும் வகையில் நாளை நில அளவை திணைக்களத்தினால் நிலஅளவை செய்யப்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி.தெற்கு திருவடிநிலைப் பகுதியிலும் எதிர்வரும் 10 ஆம் திகதி 11 ஏக்கர் நிலப்பரப்பை சவீகரிக்கும் வகையில் நில அளவை திணைக்களத்தினரால் காணிகள் அளவீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts