- Sunday
- April 28th, 2024
இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு, குழந்தைகளுக்கான பால்மாவினைக் கூட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக, குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனரென யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிகிச்சையளித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து பின்னர்...
வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஷ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடையிலான சந்திப்பொன்று இன்று (15) மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் முதலமைச்சருடன் வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன், மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளமை...
இலங்கையின் முந்தைய அரசாங்கத்தினால் போர்க் களத்தை வெல்ல முடிந்த போதிலும், தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். தமிழர்களின் மனதை வென்று, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிக்கு தான் உறுதுணையாக இருக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். முன்னாள் அமைச்சரான ரெஜினோல்ட்...
மாவீரர்களை நினைவு கூரும் உரிமையை வழங்க வேண்டும் என புதிய அரசியலமைப்பு தொடர்பாக கருத்தறியும் அமர்வில் கருத்துகளை முன்வைக்கும் போது முல்லைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். “தமிழ்மக்களின் விடுதலைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு தமிழீழமே சரியான தீர்வு. தமிழீழமா சமஸ்டியா என்னும் கேள்வியுடன் தொடர்ந்தும் காலத்தை வீணாக்கி பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் இருப்பதை விடுத்து, வடக்கையும் கிழக்கையும் நிர்வகிக்கக்...
நாமல் ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக, பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு மற்றும் நிதி மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது. தாஜுடீன் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் நேற்று கடற்படையினரால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட இருவரும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏ.யூட்சன் டெரன்சியன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகு ஒன்றில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். குறித்த மீனவர்கள் 4...
காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் முறைமை ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அத்துடன், இலங்கைச் சட்டத்திலும் இதற்கு இடமில்லை. அதற்கான அதிகாரமும் அரசுக்கு இல்லை. அதனால் மேற்படி தரப்பினருக்கு 'மரணச் சான்றிதழ்' வழங்குவதற்குப் பதிலாக 'காணாமல் போனோர் சான்றிதழ்' இன்னும் இரு மாதங்களுக்குள் வழங்கப்படும் என்று உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன சபையில் தெரிவித்தார்....
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ள வேண்டிய விசரணை நடவடிக்கைகளில் எந்தவொரு விடயத்தையும் வற்புறுத்தவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் அல் ஹுஸைன் கூறியுள்ளார். சர்வதேச நீதிபதிகளை விசாரணை நடவடிக்கையில் இணைத்துக் கொள்வது சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று அவர்...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே, மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “வடக்கு மாகாணத்தில்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,...
சிறைகளில் நீண்டகாலமாக நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறுவது தவறானது. குறைந்தளவானவர்களே சிறைகளில் உள்ளனர். அவர்களிலும் குற்றம் இனங்காணப்படாதவர்கள் சொற்ப அளவிலேயே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான வழிமுறைகளுக்கான இணையத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (12) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது, அதில்...
முதலமைச்சர் சபையை முற்றாக புறக்கணித்துவிட்டார் என்பதை அவரது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன என வட மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் குற்றம் சாட்டினார். வவுனியா, கோவில்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர். கடந்த மாகாணசபை அமர்வின்போது விவசாய...
மினிபஸ் சாரதியின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 வயதுச் சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு யாழ். நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஊர்வலமும் கையெழுத்துப் போராட்டமும் இடம்பெற்றன. இதன்போது போராட்டக்காரர்கள் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த பஸ்களை மறித்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் போக்குவரத்துக்கு...
விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, இனிமேல் விபத்துச் சாவு என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், கொலைக் குற்றம் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன். அத்துடன், வீதிப் போக்குவரத்தின் போது, பஸ் நடத்துநர்கள் மிதி பலகையில் நின்று, வீதியில் செல்லும்...
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் ஒன்று, மார்ச் மாதத்தில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பூமியை கடந்து செல்லுமா அல்லது தாக்குமா என்பதை கணிக்க முடியாமல், விஞ்ஞானிகள் அச்சத்தில் உள்ளனர். ஒரு கிலோ மீட்டர் அகலமுள்ள அந்த விண்கல், நிலாவை விட 21 மடங்கு பெரிய அளவில் பூமியை கடந்து செல்லும் என்று...
யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை செய்துள்ளார். யோதிலிங்கம் துசன் என்ற 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லூர் வடக்கு விநாயகர் வீதியைச் சேர்ந்த குறித்த முன்னாள் போராளி குடும்ப பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு போதுமான தொழில் வாய்ப்பின்றி இருந்ததாக...
யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருத்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு...
காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு யாழ்.குடாநாட்டில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27, 28, 29 ஆம் திகதிகளிலும், மார்ச் முதலாம் திகதியும் சாட்சி விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச தெரிவித்துள்ளார். கோப்பாய், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, சாவகச்சேரி, காரைநகர்...
சரத் பொன்சேகாவின் படைகள் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவரை இலங்கை அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமையானது, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு நேர்மறையானது என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. சரத் பொன்சேகாவின் இந்த நியமனமானது பரந்தளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்களை அரசாங்கம் பாதுகாக்கலாம்...
நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார். “30 ரூபாய் கொடுத்தால் போட்ல (boat) கொண்டு போய் நாகதீபவில்...
Loading posts...
All posts loaded
No more posts