- Sunday
- June 8th, 2025

புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த...

டுபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு மாடி நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தை ஒட்டி வாணவேடிக்கை நடக்க இருந்த இடத்துக்கு அருகிலேயே இந்தக் கட்டடம் உள்ளது. அட்ரஸ் டவுன்டவுன் ஹோட்டல் என்ற இந்த 63 -மாடிக் கட்டடம், உலகின் உயரமான கட்டடமான பர்ஜ் கலீஃபாவுக்கு அருகே உள்ளது....

மிகப்பெரிய இணையவழித் தாக்குதல் காரணமாக பிபிசியின் அனைத்து இணைய சேவைகளும் வியாழனன்று காலை பாதிக்கப்பட்டன. வியாழனன்று லண்டன் நேரம் காலை ஏழு மணிக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்தது. அந்த சமயத்தில் பிபிசி இணைய பக்கங்களுக்கு வந்த பார்வையாளர்களால் குறிப்பிட்ட பக்கங்களை பார்க்கவோ, படிக்கவோ முடியவில்லை. மாறாக Error message எனப்படும் குறிப்பிட்ட இணைய சேவையை நீங்கள்...

ஃபேஸ்புக் தனது பங்குகளை 2012ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் விற்பனைக்கு வெளியிடுவதற்கு முன்பு பொதுமக்களுக்கு தவறான தகவலை கொடுத்ததற்காக அதன் பங்குதாரர்களில் இரு குழுவினர் அதன் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்ததை அடுத்து அந்த நிறுவனம் இரண்டு வழக்குகளை எதிர்கொள்கிறது. தமது எதிர்கால வளர்ச்சி குறித்த கவலைகளை ஃபேஸ்புக்...

வடமேற்கு பாகிஸ்தான் நகரான மர்தானில் நடத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாகவும் பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அடையாள அட்டை பெறுவதற்காக பொதுமக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு அரசு வளாகத்தின் வாயிலில் தற்கொலை குண்டுதாரி இரு சக்கர வாகனத்தை மோதி தாக்குதலை நடத்தியுள்ளார். இறைவன் பெரியவன் என்று கத்தியவண்ணம் அந்த...

அவுஸ்திரேலிய விக்டோரியா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. இதில் பிரபல சுற்றுலா நகரங்களான வைரிவர் மற்றும் செபரேஷன் கிரீக் ஆகிய இரண்டு நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் கிறேட் ஓசோன் என்ற வீதியும் இந்த காட்டுத்தீயால்...

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இங்குள்ள ஒரு எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் தீயில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் கரிக்கட்டைகளாக கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள அனெம்ப்ரா மாநிலத்தின் நேவ்வி பகுதியில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில்...

விண் கற்களை விட வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்ணில் சுற்றித்திரியும் விண் கற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்று அடிக்கடி அறிவிக்கப்படுகிறது. ஆனால் அதைவிட தொலை தூரத்தில் உள்ள வால் நட்சத்திரங்களால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்து பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர் குழு...

சவுதி அரேபியாவில் ஆணொருவருடன் தகாத உறவைப் பேணியதாக குற்றம்சாட்டப்பட்டு கல்லால் அடித்து கொல்லுமாறு, இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மேன்முறையீட்டை அடுத்தே, அந்த நாட்டு அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த பெண் மூன்று...

2015-ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் வென்றுள்ளார். உலக அழகி போட்டியில் மிஸ் கொலம்பியா அரியட்னா குடியர்ரெஸ் இரண்டாவது இடத்தினையும், மிஸ் யுனிவர்ஸ் யு.எஸ்.ஏ ஒலிவியா ஜோர்டான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் நேற்று நடந்த 65வது உலக அழகிப்...

இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் உள்ள போர்னியோ தீவுப்பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை. சுனாமி ஏற்படுவதற்கான...

இவை வித்தியாசமான சுவர்கள். தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் இவை. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையைச் செய்கிறது. இந்தச் சுவர்கள் தற்போது லண்டனில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தன்மீது படும் எந்த திரவத்தையும் திருப்பியடிக்கும் வகையான பிரத்யேக சுவர்ப்பூச்சு தான் இந்த சுவர்களின்...

ஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் தமிழர் குடியேறினர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர் கண்டெடுத்தனர். அதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில் வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், 15-ஆம் நூற்றாண்டுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பின் வருமாறு : “முகையதீன் வக்குசு உடைய...

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வத்திக்கான் விசேட வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைக்குத் தான் விஜயம் செய்திருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட பாப்பரசர், உபசரிப்பும் நற்புறவும் நிறைந்த மக்களையும் இயற்கை அழகையும் கொண்ட ஒரு வளமான நாடு இலங்கை என ஜனாதிபதியிடம் தெரிவித்தார். இலங்கையின்...

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்க நெருங்கிவரும் கடும் சூறாவளியின் விளைவாக மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் வசிக்கும் சுமார் ஏழரை லட்சம் மக்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 'மெலான்' என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளியின் விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 20 மாகாணங்களில் கடுமையான புயல்காற்றுடன் சுமார் 12...

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கனடாவின் அல்பெர்டா பல்கலைகழக பேராசிரியர், மேத்யூ டம்பெரி இது குறித்து கூறும்போது பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் துருவங்களின் அடர்த்தி குறைவதும்,...

சீனாவை சேர்ந்த ஹூனான் பலகலைக்கழக அறிவியல் அகாடமி, பனி சிறுத்தை சரணாலயம் ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின அந்த ஆய்வில் அந்த ஆய்வில் பூமி வெப்பமடைவதால் எவரெஸ்ட் பனி மலை உருகிவருகிறது இத்னால் கடலின் நீர்மட்டம் அதிகரிக்குமென அஞ்சுன்றனர். கடல்மட்டம் அதிகரிப்பதால் நியூயார்க், லண்டன், மும்பை போன்ற உலகின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும்...

சவுதி அரேபியாவில் திருமணத்துக்கு வெளியில் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் நடத்துவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் இணங்கியுள்ளதாக இலங்கை கூறியுள்ளது. அந்தப் பெண்ணை கற்களால் அடித்துக்கொல்ல வேண்டும் என்று நான்கு மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அவர் மீதான வழக்கு விசாரணை மீண்டும் நடக்கவுள்ளதாக இலங்கையின்...

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை அடியோடு அழிக்கும்வரை ஓயமாட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா சூளுரைத்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட ரிஸ்வான் ஃபரூக்கும், அவரது பாகிஸ்தான் மனைவி தஷ்ஃபீன் மாலிக்கும் இரவு விருந்து நிகழ்ச்சியொன்றில் கடந்த வாரம் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை பயங்கரவாதச் சம்பவமாக...

திருமணத்துக்கு முரணான உறவைக் கொண்டிருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கல்லால் எறிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதை, சவூதி அரேபிய அரசாங்கம் பிற்போட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பாக ஆராயப்படும் வரையிலேயே, இந்தத் தண்டனை பிற்போடப்பட்டுள்ளது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே, சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தால்...

All posts loaded
No more posts