மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

இலங்கையுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் ஜோன் பிலிப் கோடீஷ் கூறியுள்ளார்.

microsoft

உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்படுத்தப்படவுள்ள ஒப்பந்தத்தினூடாக, இலங்கையின் அபிவிருத்திக்காக புதிய சந்ததியினருக்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு துறைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பு செய்வதற்கு விஷேட குழுவொன்றை விரைவில் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

Related Posts