- Saturday
- July 4th, 2026
அமெரிக்காவின் Ohio பகுதியில் உள்ள Miami Valley வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 17 தாதியர்களும் கர்ப்பம் கர்ப்பமடைந்துள்ளமை பேச்சு பொருளாக மாறியுள்ளது. 17 தாதியர்களும் வரிசையாக Baby Bumps உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளதாகவும், இது தங்கள் அனைவருக்கும் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக...
வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய கெப் வண்டி மோதியதில் எட்டு தேரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 13 தேரர்கள் படுகாயமடைந்துள்ளனர். முவெங் (Mueang) மாவட்டத்தின் பான் நா சி நுவான் (Ban Na...
ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அந்தநாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆய்வாளர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்....
நியூயோர்க் நகரிலுள்ள எம்பயர் அரச கட்டிடத்தின் உயரமான கோபுர உச்சியின் மேல் ஆபத்தான முறையில் ஏறி, திருமண முன்மொழிவை செய்ததாகக் கூறப்படும் இளம் ஜோடியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்ட சாகசங்களில் ஈடுபடும் எஞ்சலா நிகோலாவ் (Angela Nikolau) மற்றும் வான்யா பீர்கஸ் (Vanya Beerkus) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச...
நெதர்லாந்தில், 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,00,000 இற்கும் மேற்பட்ட மின்னல்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வுத் துறையான KNMI தெரிவித்திருப்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை நிலவி வருகிறது. இதனால், நெதர்லாந்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக வெப்பநிலை 30°C முதல் 40°C வரை பதிவாகியிருந்தது....
பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவர். இந்தக் கூரை...
வெனிசுவேலாவின் வடக்குப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை பூமியதிர்ச்சியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,943 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். ரிச்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்த பூமியதிர்ச்சி ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் நிலைகுலையச் செய்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் சர்வதேச உதவிகள் குறித்த புதிய விபரங்கள் வெளியாகியுள்ளன. பூமியதிர்ச்சியால்...
அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிறப்பின் அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமை வழங்குவதைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 9 நீதிபதிகள் கொண்ட இந்த நீதிபதிகள் குழுவில், டிரம்பின் உத்தரவுக்கு ஆதரவாக 3 நீதிபதிகளும், அதற்கு எதிராக 6 நீதிபதிகளும் தீர்ப்பளித்துள்ளனர். இந்தத்...
ஒரு காலத்தில் சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பிரபல தொழிலதிபர் குவோ வெங்குய்’க்கு, பில்லியன் டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க நீதிமன்றத்தினால் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முன்னணி தொழிலதிபராக இருந்த குவோ வெங்குய், கடந்த 2017ஆம் ஆண்டு சீனாவிலிருந்து தப்பி அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு தன்னை...
ஜேர்மனியின் ஸ்டேட் நகரில் அமைந்துள்ள தாய் மற்றும் சேய் நலன்புரி மையம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். தனது மகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புரிமை தொடர்பான குடும்பத் தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்தநாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச...
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்களால் அரச ஊழியர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, நீதிபதிகள் உட்பட இராணுவ மற்றும் சிவில் நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் கடந்த 16 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ஸ்மார்ட்போன்...
சிறுமிகள், இளம்பெண்களை கடத்தி பணம் படைத்த பெரும் புள்ளிகளுக்கு அனுப்பிய மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் தொழிலதிபர் பில் கேட்ஸ். எப்ஸ்டீன் உடனும் பல பெண்களுடனும் கேட்ஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகளில் இருந்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. பில் கேட்ஸ்க்கு இருந்த பல தகாத உறவுகள்...
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் குறைந்தது 235 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தங்களினால் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கராகஸ் (Caracas) மற்றும் லா குவைரா (La Guaira) மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது அங்குள்ள இடிபாடுகளுக்குள் மீட்புப் பணியாளர்கள் தேடுதலில்...
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போருக்கு முந்தைய நிலைக்கு எண்ணெய் விலை சரிவு கண்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே புரிந்துணர்பு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டு எண்ணெய் விநியோகத்தின் தீர்க்கமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை படிப்படியாக இயல்புநிலைக்கு மாறிவரும் நிலையிலேயே இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச குறியீடான பிரெண்ட் ரக மசகு எண்ணெய்...
முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதல்களின் விளைவாக இந்தியாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்கள், பெற்றோல் மற்றும் ஜெட் எரிபொருள் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்த ரஷ்யப் பிரதிப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், எரிபொருள் இறக்குமதி...
வெனிசுவேலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் பாரிய சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. இவாத்தேவின் வடக்கு பகுதிக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது...
நைஜீரியாவில் பொக்கோஸ் நகரில் உள்ள காவெல் கிராமத்தில் நள்ளிரவில் மர்ம கும்பலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஸ்தலத்திலேயே 20 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆயுதமேந்திய சிலரால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெவ்வேறு...
தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாடு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தலைநகர் கராகஸில் (Caracas) உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இடிந்து விழுந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தரவுகளின்படி, நேற்றையதினம் (24) இரவு 10.04 மணியளவில் முதலாவது நிலநடுக்கம் ரிக்டர்...
கனடாவின் மொன்றியல் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் நிறைந்த மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியிலேயே இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டை நடத்திய...
ஈரான் நாடு தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில், அமெரிக்க செனட் சபை கொண்டு வந்துள்ள போர் அதிகாரச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்ற ஒன்று என அவர் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
Loading posts...
All posts loaded
No more posts
