காலதாமதமாக வந்த ஊழியரை பணிநீக்கம் செய்த AI!!

அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை ஏஐ, முகாமையாளர் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழில்நுட்ப வரலாற்றில் ஏஐ முகவர் ஒருவர் மனித ஊழியரின் வேலைவாய்ப்பைப் பறித்த முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் 'ஆண்டன் லேப்ஸ்' என்ற நிறுவனம், சோதனைக் கடை ஒன்றை நடத்தி வருகிறது. இந்த...

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன்!!!!

பிலிப்பைன்ஸில் பாடசாலையொன்றில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியரை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததோடு, பின்னர், தாக்குதல் நடத்திய மாணவர், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தாக்குதல் நடத்திய மாணவர், தான் தாக்குவதை நேரலையாக காட்சிப்படுத்துவதற்காக ஒரு கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றதாக...
Ad Widget

ட்ரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!!

ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலையடுத்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (18) மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், அது 91.24 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் உத்தரவு

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க தென் கொரியா மறுத்ததை சுட்டிக்காட்டி, அந்நாட்டுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை கணிசமாகக் குறைக்குமாறு பென்டகனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இராணுவப் பயிற்சிகள் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், பயிற்சிகளை முற்றிலுமாக ரத்து செய்ய காலதாமதமாகிவிட்ட போதிலும், இதில் பங்கேற்க...

இந்தோனேசியாவில் மீண்டும் பதிவான நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை. இந்தோனேசியாவில்...

ட்ரம்பின் உயிருக்கு ஈரானால் ஆபத்து?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவிற்குப் பல எச்சரிக்கைகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளால், வௌ்ளை மாளிகைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த தகவலுக்கான எவ்வித ஆதாரமும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு உறுதியாக கிடைக்கவில்லை என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ்...

ஆபிரகாம் லிங்கன் கப்பல் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் உள்ள சில மாலுமிகள் கப்பலில் இருந்து கடலில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றதாகவும், கப்பலில் உள்ளவர்களின்...

ஜப்பானில் இலங்கை இளைஞரை கொலை செய்த நண்பன்!!

ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கொலையை அவருடன் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட...

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்!!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இராஜாங்கத் திணைக்களத்தில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் நீண்டகால அனுபவம் கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான இவர், இலங்கை – அமெரிக்கா...

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் பதவி விலகத் தீர்மானம்!!

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) இம்மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதற்காகவே அவர் இந்தப் பதவியிலிருந்து விலகுவதாகவும், அந்த முடிவை முழுமையாகப் புரிந்துகொண்டு மதிப்பளிப்பதாகவும் ஜனாதிபதி தனது சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும்...

சீனாவில் 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!!

சீனாவில் டொல்பின் சூறாவளி பெரும் தாக்கத்தையும் சேதத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வரும் நிலையில், ஷாங்காய் நகர் உட்பட கிழக்குப் பகுதிகளிலிருந்து 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை அந்நாட்டு அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டொல்பின் புயல் காரணமாக பலத்த மழை பெய்து அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்று...

அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை தீர்மானிப்பதற்காக ஓமானுடன் இறுதி உடன்படிக்கைக்கு வரத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், இந்த கடல் பாதையை மீண்டும் திறக்க வேண்டுமானால், இழப்பீடு வழங்குதல், தடைகளை நீக்குதல் மற்றும் இராஜதந்திர அச்சுறுத்தல்களை நிறுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடந்த...

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

டஜன் கணக்கான நாடுகளின் மீது புதிய வரிகளை விதித்ததன் மூலம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, அமெரிக்காவின் 25 மாநிலங்கள் திங்களன்று (03) அவரது நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளன. நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் மாநிலங்கள் வழக்குத் தாக்கல் செய்தன. அதில் நீதிபதிகள், சுங்க...

வெனிசுலா நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,000 ஐ கடந்தது

ஜூன் மாதம் வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கங்களில் இதுவரை 6,125 பேர் உயிரிழந்தனர் என தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். கடந்த ஜூன் 24 ஆம் திகதியன்று ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள், பெரும்பாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலோர மாநிலமான லா குவைராவில், கிட்டத்தட்ட 200 கட்டிடங்களை இடித்து...

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை இன்று மீள ஆரம்பம்!!

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று (3) முதல் மீண்டும் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ​ எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு எதையும் அவர் நிர்ணயிக்கவில்லை. ​ ஹோர்முஸ் நீரிணையை விரைவாக மீண்டும் திறப்பது மற்றும் தெஹ்ரானின் அணுசக்தித் திறன் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான உடன்பாட்டை எட்டும் நோக்கில்,...

பொலிஸ் சாவடி மீது தாக்குதல்: 11 பொலிஸார் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் சாவடி மீது நடத்தப்பட்ட கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனையடுத்து இடம்பெற்ற ஒரு மணிநேரத் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையினர் 15 தீவிரவாதிகளைக் கொன்றதாக...

ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்தது அமெரிக்கா

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. [caption id="attachment_128403" align="aligncenter" width="760"] People watch as smoke rises on the skyline after an explosion in Tehran, Iran, Saturday, Feb....

ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு சிறை!

பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கையைச் சேர்ந்த ‍இளைஞர் ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட 22 வயதான சரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar) மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட பாட்லி மாஹ்வினி (Baddeley Mawhinney) ஆகியோர் ஏப்ரல் 25...

கனடாவில் அமெரிக்க தூதரகம் அருகில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும், கட்டிடத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நான்கு மாத காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மார்ச் 10...

ஈரானுடன் பேச்சுவார்த்தை!! – டிரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் மிகவும் சுமுகமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சாதகமான வாய்ப்பு உள்ளதாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அமெரிக்காவுடன் தாங்கள் எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றைய தினமும் (27) ஈரானுக்கும்...
Loading posts...

All posts loaded

No more posts