அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!!

அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் சிறு குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை. இந்தத்...

பிரித்தானிய அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சராக உமா குமரன்

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர்...
Ad Widget

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்!

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது....

சவூதியுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அமெரிக்கா!

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுடன் தனது சிவில் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் துல்லியமான விபரங்கள் இதுவரை பகிரப்படவில்லை என்பதுடன், இது இன்னமும் அமெரிக்க காங்கிரஸின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது. இது பல தசாப்த காலம் நீடிக்கக்கூடிய, பில்லியன் கணக்கிலான...

செங்கடலில் பயணித்த 2 சவூதி கப்பல்கள் மீது தாக்குதல்!!

செங்கடலில் பகுதியில் பயணித்த 2 சவூதி எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர். ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்தும் ஈரானின் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், செங்கடலில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் இரண்டாவது தடையை ஏற்படுத்துவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே,...

இறக்குமதியாகும் மருந்துகளுக்கு 200 சதவீதம் வரி!!

அமெரிக்கா தமது நாட்டின் மருந்துத் தேவைகளுக்கு, குறிப்பாக மலிவு விலை ஜெனரிக் மருந்துகளுக்கு, பெருமளவில் வெளிநாடுகளையே நம்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய மருந்து சந்தையான அமெரிக்காவுக்கு இந்தியாதான் முதன்மை வினியோகஸ்தராக உள்ளது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 3 மாத்திரைகளில் 1 மாத்திரை இந்தியாவால் தயாரிக்கப்படுகிறது. அதாவது அமெரிக்காவின் மொத்த ஜெனரிக் மருந்து தேவையில் 47 சதவீதம் வரை...

பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் அண்டி பர்ன்ஹாம்!!

பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அண்டி பர்ன்ஹாம் உத்தியோகபூர்வமாக பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் பிரித்தானியாவின் நான்காவது பிரதமராகவும், கடந்த பத்து ஆண்டுகளில் ஆறாவது பிரதமராகவும் அவர் பதவியேற்றுள்ளார். தொடர்ச்சியான அரசியல் பின்னடைவுகள் மற்றும் கட்சிக்குள் எழுந்த அதிருப்தி காரணமாக, தொழிற்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளில்...

கனடிய பொருட்களுக்கு 50% வரி விதிக்க டிரம்ப் தீர்மானம்

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இந்த வரி விதிப்பு 30 நாட்களுக்குள் அமுல்படுத்தப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க வர்த்தகக் கொள்கைக்கு எதிராக கனடா செயல்படுவதன் காரணமாகவே இந்த புதிய வரி விதிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உற்பத்தி...

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்கள் மேற்காசியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கட்கிழமை (20) மசகு எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை வழியிலான எரிபொருள் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகளே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்....

ஈரான் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக்க இராணுவ வீரர் பலி!!

வட ஈராக்கில் ஈரான் நடத்திய தாக்குதலில் தமது படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானிய தாக்குதல் ஆளில்லா விமானம் ஒன்றில் இருந்த வெடிக்காத வெடிபொருளை கட்டுப்பாடான முறையில் வெடிக்கச் செய்த நடவடிக்கையின் போதே குறித்த அமெரிக்க வீரர் கொல்லப்பட்டதாகவும், இதில் இரண்டாவது படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம்...

மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்கா

அமெரிக்காவிற்கு செல்லும் சர்வதேச மாணவர்கள், கலாசார பரிமாற்றத் திட்ட பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருக்கக்கூடிய வீசா காலக்கெடுவை கடுமையாகக் குறைத்து, நிலையான ஒரு காலப்பகுதியை நிர்ணயிப்பதற்கான புதிய இறுதி விதியை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை வியாழக்கிழமை (16) வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதிாக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக்கப்பட்டு...

மியான்மர் கடற்பகுதியில் 500க்கு மேற்ப்பட்டோர் உயிரிழப்பு??

மியான்மர் கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று ஐ.நா. அச்சம் தெரிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரைச் சேர்ந்த அகதிகள், பாதுகாப்பு மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேடி ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில், 500 இற்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற 02 படகுகள் சமீப...

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் ஐவர் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல்களில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவின் வடக்கில் உள்ள துஃபா பகுதிக்கு அருகே நடந்த இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், கிழக்கு காசா நகரின் ஸைத்தூன் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த பீரங்கித் தாக்குதலில் மூன்றாவது நபர் கொல்லப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்....

கடல்வழிப் பாதைகளை முடக்குவதற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!!

ஈரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்திருப்பதோடு மேலும் முக்கிய கடல்வழி பாதையை முடக்குவது குறித்து ஈரான் எச்சரித்திருக்கும் சூழலில் போர் பதற்றம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாகவும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்திய...

பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த அமெரிக்க – ஈராக் தலைவர்கள் உறுதி

பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தவும், ஈராக்கின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் அமெரிக்க, ஈராக் தலைவர்கள் உறுதிபூண்டுள்ளனர். அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று முன்தினம் வௌ்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சமயமே மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது, அமெரிக்காவுடனான உறவுகள் இராணுவ ரீதியான...

ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களுக்கு 20 சதவீத கட்டணம் அறவிட டிரம்ப் திட்டம்!!

ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கடற்படைத் தடைகளை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதிபர் டிரம்ப் இட்டுள்ள முழுமையான பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: "ஹோர்முஸ் நீரிணை...

ஐக்கிய அரபு இராஜ்ஜிய எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!!

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது ஈரான் நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில், இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்த எண்மரில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களில் அறுவர் இந்தியப் பிரஜைகள் என்பதுடன் இருவர் உக்ரைன்...

ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டும் 10,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

ஐரோப்பாவின் மேற்குப் பகுதியை உலுக்கிய மிகக் கடும் வெப்ப அலையினால் ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படும் யூரோமோமோ அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி,ஜூன் 22 முதல் 28...

உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவின் கப்பல் போக்குவரத்து முடங்கியது!!

ஒரே வாரத்தில் 90-க்கும் மேற்பட்ட ரஷ்யக் கப்பல்களை உக்ரேனிய ட்ரோன்கள் (Drones) குறிவைத்துத் தாக்கியதைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்குப் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த அசோவ் கடலில் (Sea of Azov) தனது கப்பல் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாஸ்கோ நிர்பந்திக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் ட்ரோன் படைப் பிரிவுகளின் தலைவர் ராபர்ட் ப்ரோவ்டி இதுகுறித்து...

தாய்லாந்தில் களியாட்ட விடுதியில் தீ விபத்து – 27 பேர் பலி

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவதாக அந்த நாட்டின் பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தெரிவித்துள்ளார். அதேநேரம் அங்கு தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும்...
Loading posts...

All posts loaded

No more posts