வெப்ப அலையால் தவிக்கும் ஐரோப்பா: பிரான்சில் 40 பேர் பலி!

முழு ஐரோப்பிய பிராந்தியம் முழுவதும் சாதனை படைக்கும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள காலநிலை தாக்கங்களினால், கடந்த சில நாட்களுக்குள் பிரான்சில் மட்டும் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் பெரும்பான்மையான மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கடுமையான வெப்ப காலநிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின்...

ஈரான் மீதான தடைகளை தளர்த்திய அமெரிக்கா!

பிராந்தியம் முழுவதும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் மீதான தடைகளை 60 நாட்களுக்கு அமெரிக்கா தளர்த்தியது. அதேவேளையில், அந்த ஒப்பந்தத்தின் கீழ் லெபனானில் மோதலில் தொடர்ந்து அமைதி நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தை ஈரான்...
Ad Widget

கட்டாரில் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிப்பு : 13 பேர் பலி, 66 பேர் காயம்!

கட்டாரின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் அமைந்துள்ள நாட்டின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு செயலாக்க மையத்தில், இந்த தொழில்நுட்ப விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது....

சுட்டெரிக்கும் வெயிலால் பள்ளிகளுக்கு விடுமுறை: தீவிரமடையும் வெப்ப அலை!

பிரான்ஸ் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிரமடைந்து வரும் வெப்ப அலை காரணமாக பிரான்சின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை முன்னறிவிப்பாளரான மெட்டியோ-பிரான்ஸ் தகவலின்படி, மேற்கு பிரான்சின் சில பகுதிகளில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கும்...

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு!!

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். தமது பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக,...

20 நாடுகளைச் சேர்ந்த 60 மருத்துவ நிபுணர்கள் இணைந்து AI, 3D உதவியுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு!!

AI இன் உதவியுடன் தலை ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவி சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை சகோதரிகள் கடந்த 2023ஆம் ஆண்டு நைஜீரியாவில் பிறந்துள்ளனர். தலைப் பகுதியில் ஒட்டிப்பிறந்த இவர்களை பிறப்பில் சத்திரகிச்சைக்கு உட்படுத்துவதில் மருத்துவ ரீதியிலான சிக்கல்கள் காணப்பட்டன. இந்நிலையில் மூளை திசுக்கள் மாத்திரமன்றி இரத்த குழாய்களும் இவர்களுக்கு ஒட்டியதாக காணப்பட்டுள்ளன. இந்நிலையில் 20...

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு!! 3 மாணவர்கள் பலி!!

பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. வழமைப்போல் பாடசாலை இயங்கி வந்த நிலையில், 2 மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த...

அமெரிக்க – ஈரான் பேச்சு தொடர்கிறது – ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல்

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதி உடன்பாட்டை எட்டுவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் தொடருகின்றது. இந்த பேச்சுவார்த்தையானது இரவு முழுவதும் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 60 நாட்களுக்குள் ஒப்பந்தத்தை எட்டுவது என்று கடந்த வாரம் எட்டப்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து, அமெரிக்கா- ஈரான் இடையேயான இந்த பேச்சுவார்த்தை கடந்த...

ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்!!

ஹோர்முஸ் நீரிணையை அனைத்து கடல் போக்குவரத்திற்கும் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஈரானின் மத்திய இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. ஈரானிய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள், தெஹ்ரான் ஆட்சிக்கும் வொஷிங்டனுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் மீறியதற்குப் பதிலடியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. குறிப்பாக லெபனான் பிராந்தியத்தில், போர்நிறுத்த...

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் என்று செய்திகள் வௌியாகியுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி உடனான இரவு விருந்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் இதனை உறுதிப்டுத்தியுள்ளார். ஜி7 உச்சிமாநாட்டை தொடர்ந்து...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மொலுக்கா கடற்பரப்பில், டெர்னேட் நகருக்கு அருகில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் பக்குலின் நகருக்குக் கிழக்கே 68 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடல் பகுதியில், 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிர்...

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால், அந்நாட்டு நேரப்படி காலை 11:44 மணியளவில், சுமார் 20 கிலோமீற்றர் (12 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ள ஜப்பானிய வானிலை ஆய்வு...

வடக்கு ஜப்பானை தாக்கியது முதல் சுனாமி பேரலைகள்!!

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தை தொடர்ந்து ஜப்பானை சுனாமி பேரலைகள் தாக்கியுள்ளது. இந்த சுனாமி பேரலை ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ தீவில் சுமார் 30 சென்டிமீட்டர் (ஒரு அடி) உயரத்திற்கு மேலெழுந்துள்ளது. அங்கு அடுத்தடுத்த அலைகள் மிக அதிகமாக தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின்...

வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் நள்ளிரவு 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரிக்டர் அளவில் 5.7 என்ற அளவு மிதமான சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக கருதப்பட்டாலும், அடர்ந்த மக்கள்...

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியூஷு தீவுக்கு அருகில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 02ஆம் திகதி புதன்கிழமை இரவு 10.00 மணிக்கு ஜப்பான் நேரப்படி, காலை 7.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கியூஷு தீவிலிருந்து சுமார் 40 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த...

வௌவால்களால் பரவும் கொரோனா வைரஸ் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!

வௌவாலிலிருந்து பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸை சீனாவின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது, விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவின் நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான ஆய்வாளர்கள், மேற்கொண்ட ஆய்வில் இப்புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. எச்.கே.யு.05 வி-02 என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த வைரஸ்...

சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ்!! அச்சத்தில் உலக நாடுகள்!!

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன. மேலும், சீனாவில் இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம்...

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு!

ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய்க்கு எதிரான தனது சொந்த ‘mRNA’ தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்து உள்ளார்....

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிச்டரில் 5.6 ஆக பதிவு

பிலிப்பைன்சில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை ஜெர்மன் புவிஅறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் இன்று தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
Loading posts...

All posts loaded

No more posts