Ad Widget

தொடரும் உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்!!

உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் சோச்சியில் உள்ள ஹெலிகாப்டர் தளம் மற்றும் ஸ்மோலென்ஸ்கில் உள்ள விமான தொழிற்சாலையை தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. உள்ளூர் ரஷ்ய சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில் சோச்சியின் அட்லர் விமான தளத்திற்கு அருகே புகை மற்றும் வெடிப்புகளைக் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காணொளியில் குறித்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதத்தின்...

உக்ரைனால் கொல்லப்பட்ட ரஷ்ய கடற்படை தளபதி: காணொளி இணைப்பால் வெளியான புதிய சர்ச்சை

உக்ரைனின் சிறப்பு தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில் காணொளி இணைப்பு மூலம் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் போர் விமானங்கள் தரையிறங்கும் மின்ஸ்க் கப்பல் மீது உக்ரைன் சிறப்பு தாக்குதல் நடத்தியிருந்தாக...
Ad Widget

உயிர்போகும் வரை உக்ரைனியர்களை கொடுமைப்படுத்தும் ரஷ்யா: ஐ.நா அதிர்ச்சி தகவல்

ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை...

பாடசாலை மைதானங்களில் சிறுவர்களுக்கு போர் பயிற்சி: ரஷ்யாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு

ரஷ்யா பாடசாலைகளில் குழந்தைகளை மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் போரில் வெற்றி பெற இரு தரப்பும் பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றது. அந்த வகையில் ரஷ்யா, தன் நாட்டு பாடசாலைகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள்...

ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் 4 பேர் பலி!!

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ட்ரோன்கள் உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு, ஈரானால் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் - 136 ட்ரோன்களை ரஷ்யா அதிகமாக பயன்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரான் இராணுவ தலைமையுடன் ரஷ்ய பாதுகாப்பு...

உக்ரைனிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 19 ஆயிரம் குழந்தைகள்! பரபரப்பு தகலை வெளியிட்ட உக்ரைன்

ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக 19 ஆயிரம் குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. மாநாட்டில் உரையாற்றிய போதே ஒலெனா ஜெலன்ஸ்கா இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே 19 ஆயிரம் குழந்தைகளை மீட்டு வர உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா...

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்

நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (20.09.2023) காலை அந்நாட்டு நேரப்படி காலை 9.20 மணியளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் முக்கிய நகரான கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து மேற்கே, 124 கிலோ மீட்டர் தொலைவில் தென்மத்திய தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

போரின் போது இலங்கைக்கு வடகொரியா மூலம் உதவி வழங்கிய சீனா!! தற்பொழுது ரஷ்யாவிற்கு!!

இலங்கையில் போர் நடைபெற்ற போது சீனா நேரடியாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்காது தனது முகவர் ஊடாக வடகொரியா மூலம் ஆயுதங்களை வழங்கியதாக சிரேஸ்ட விரிவுரையாளரான கலாநிதி மகிந்த பத்திரண தெரிவித்துள்ளார். வடகொரிய ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடகொரிய ஜனாதிபதி கிம்...

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உள்ளிட்டோரின் சொத்துக்களை ஏலம் விட ரஷ்யா முடிவு

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உட்பட நூற்றுக்கணக்கான உக்ரைனியர்களுக்கு சொந்தமாக கிரீமியாவில் உள்ள சொத்துகளை விற்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அவற்றில் கிரீமியா தன்னாட்சிக் குடியரசிலுள்ள 100 சொத்துக்களை விற்க திட்டமிட்டு வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, கிரீமியாவிலுள்ள, தேசிய மயமாக்கப்பட்டுள்ள சொத்துக்களை விரைவில் விற்பனை செய்ய இருப்பதாக கிரிமியாவின் நாடாளுமன்ற சபாநாயகரான Vladimir Konstantinov தெரிவித்துள்ளார்....

வட கொரியாவுடன் இராணுவ ஒத்துழைப்புக்கு திட்டமிடும் ரஷ்யா

ரஷியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் சில வரம்புகள் இருந்தாலும், இப்போது உள்ள கட்டமைப்புகளைக் கொண்டே இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அணு ஆயுத சோதனைகளை நடத்தியதன் மூலமும் ஐ.நா. தடையையும் மீறி நீண்ட தொலைவு பாய்ந்து செல்லும் பலிஸ்டிக்...

ரஷ்யாவின் புனித போரை ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு!

மேற்குலகம் உடனான ரஷ்யாவின் புனிதப்போரை ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவிலிருந்து தொடருந்து பயணமாக ரஷ்யா வந்தடைந்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு, பிரிமோர்ஸ்கி க்ராய் தொடருந்து நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடருந்து நிலையத்திலிருந்து வோஸ்டோச்னி சென்ற கிம் ஜாங் உன்னை ரஷ்ய ஜனாதிபதி புதின் வரவேற்றுள்ளார். இதன் பின்னர்...

வடகொரிய ஜனாதிபதியை சந்திக்கும் புடின்: அச்சத்தில் முக்கிய நாடுகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பை ஏற்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதியை எதிர்வரும் நாட்களில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரஷ்யாவின் அதிகாரபூர்வ செய்தி தளமான கிரெம்ளின் இணையதளமும், வட கொரியாவின் அதிகாரபூர்வ கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தற்போது வரை இச்சந்திப்பு எங்கு நடைபெறும்...

புடினின் சர்வதேச பிடியாணை தொடர்பில் பிரேசில் தகவல்!!

அடுத்த வருடம் பிரேசில் தலைநகரில் இடம்பெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்துகொண்டால் அவர் கைதுசெய்யப்படமாட்டார் என பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு புடினிற்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் புடினால் பிரச்சினைகள் இன்றி பிரேசில் வரமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்....

உக்ரைனுக்கு சர்ச்சைக்குரிய குண்டுகளை வழங்கும் அமெரிக்கா: ரஷ்யா கடும் கண்டனம்

உக்ரைனுக்கு சா்ச்சைக்குரிய ‘யுரேனிய சக்கை’யைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை அளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் திடீா் சுற்றுப் பயணமாக உக்ரைனுக்கு வருகைதந்த போது, யுரேனியச் சக்கையைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை உக்ரைனுக்கு அளிக்கவிருப்பதாக அவா் அறிவித்தாா். ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு புதிதாக அளிக்கவிருக்கும் இராணுவ உதவிகளின்...

வாக்னர் கூலிப்படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்க பிரித்தானியா அரசு திட்டம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் வாக்னர் கூலிப்படையை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்போவதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன், சிரியா, மாலி போன்ற நாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வாக்னர் கூலிப்படை மீது கொடூர கொலைகள், கைதிகளை சித்திரவதை செய்தல், சூறையாடுதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்,...

உக்ரைனுடன் மீண்டும் தானிய ஒப்பந்தம் கிடையாது: புடின் திட்டவட்டம்

தங்களது வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை மேற்கத்திய நாடுகள் அனுமதிக்காத வரை, உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து கருங்கடல் வழியாக தானியங்களைக் கொண்டு செல்வதற்கான அந்த ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக ரஷ்யா கடந்த ஜூலை மாதம்...

பதவியிலிருந்து நீக்கப்பட்ட உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர்!!

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸி ரெஸ்னிகோவ் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதிய பாதுகாப்பு அமைச்சராக உயர் பதவியிலிருந்த ரஸ்டெம் உமெரோவ் ஐ நியமித்துள்ளார். புதிய நியமனத்தை அறிவித்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போருக்கு புதிய போர்வையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 57 வயதான ரெஸ்னிகோவ்,...

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்: நகரை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ள விமானங்கள்!!

உக்ரைன் - ரஷ்யா போர் 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்ய நிலப்பரப்பு மீதான தாக்குதல் போரில் தவிர்க்க முடியாதது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்,சுமார் 100 மேற்பட்ட விமானங்கள்...

மோசமான இரவை எதிர்கொள்ளும் புடின்! ட்ரோன் தாக்குதலினால் திணறும் ரஷ்யா!!

உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் நான்கு இராணுவ விமானங்கள் சேதமடைந்துள்ளமை ரஷ்யா எதிர்கொள்ளும் மிக மோசமான தாக்குதல் சம்பவம் என தகவல் வெளியாகியுள்ளது. 10 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் பிஸ்கோவ் பகுதியில் உள்ள விமான தளத்தை தாக்கியதாக கூறப்படுகின்றது. எஸ்டோனியா மற்றும் லாட்வியாவின் எல்லைக்கு அருகில் இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த...

ஜி20 மாநாட்டுக்கு அழைப்பு: மோடிக்கு பதில் வழங்கிய புடின்

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலாதது குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக ரஷ்ய தரப்பில் வெளியுறவு அமைச்சர் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்பாா் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா தலைமை வகிக்கும் நிகழாண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு, வரும்...
Loading posts...

All posts loaded

No more posts