சவுதியில் இலங்கை பெண் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

சவுதி அரேபியாவில் திருமணத்துக்கு வெளியில் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் நடத்துவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் இணங்கியுள்ளதாக இலங்கை கூறியுள்ளது. அந்தப் பெண்ணை கற்களால் அடித்துக்கொல்ல வேண்டும் என்று நான்கு மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அவர் மீதான வழக்கு விசாரணை மீண்டும் நடக்கவுள்ளதாக இலங்கையின்...

ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிக்கும்வரை ஓயமாட்டோம் – ஒபாமா

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை அடியோடு அழிக்கும்வரை ஓயமாட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா சூளுரைத்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட ரிஸ்வான் ஃபரூக்கும், அவரது பாகிஸ்தான் மனைவி தஷ்ஃபீன் மாலிக்கும் இரவு விருந்து நிகழ்ச்சியொன்றில் கடந்த வாரம் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை பயங்கரவாதச் சம்பவமாக...
Ad Widget

இலங்கை பெண்ணின் மரண தண்டனை பிற்போடப்பட்டது

திருமணத்துக்கு முரணான உறவைக் கொண்டிருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கல்லால் எறிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதை, சவூதி அரேபிய அரசாங்கம் பிற்போட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பாக ஆராயப்படும் வரையிலேயே, இந்தத் தண்டனை பிற்போடப்பட்டுள்ளது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே, சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தால்...

இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவையொட்டியுள்ள இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

கலிபோர்னியாவில் துப்பாக்கிச் சூடு: 20 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் அருகில் உள்ள சான் பெர்னார்டினோ என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது....

தந்தையானார் பேஸ்புக் நிறுவுனர் மார்க்; உலகத்தை மாற்ற பல கோடிகள்!

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவுனர் மார்க் ஷகர்பெர்க் மற்றும் இவரது மனைவி பிரிஸ்சில்லா தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு மெக்ஸ் என பெயர் சூட்டியுள்ளனர். தங்களது குழந்தையின் புகைப்படத்தை அவர்கள் ​பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அத்துடன் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் உள்ள பேஸ்புக் நிறுவுனர் மார்க்...

ஐந்து வயது மகள் முன்னால் தமிழ் அகதி தற்கொலை முயற்சி!

இலன்கையிலிருந்து கடல்வழியாக ஆஸ்ரேலியவிற்க்கு தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் புகலிடம் கோரி வந்த தமிழ் அகதி ஒருவர் நாவுரு தடுப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் இருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடார். 30 வயதான குறித்த தமிழர் 2012 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் கடல் வழியாக படகு மூலம் ஆஸ்ரேலியவிற்க்கு...

சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்ற திட்டம்

சௌதி அரேபியா பல டஜன் கணக்கானோருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு அச்சம் தெரிவித்திருக்கிறது. 55 பேர் "பயங்கரவாதக் குற்றங்களுக்காக" மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்று ஒக்காஸ் என்ற பத்திரிகை கூறியது. ஆனால் அல் ரியாத் பத்திரிகையில் வெளியாகி, தற்போது நீக்கப்பட்ட செய்தி ஒன்றில்,...

தமிழ்க்கைதிகளின் விடுதலைக்காய் தனதுயிரை மாய்த்துக் கொண்ட மாணவனின் சம்பவம் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது: – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலுயுறுத்தி கோண்டாவில் தொடருந்து வழித்தடத்தில் தொடருந்து முன் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்ட மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனது சம்பவத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் சுதன்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மாவீரர்களை நினைவேந்தி நிற்கும்...

ரொரன்டோ முருகனும் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக குற்றச்சாட்டு!!

கனடாவின் ரொரன்டோவிலுள்ள முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்றான கந்தசாமி ஆலயம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த ஆலயம் இவ்வாறு பணம் வழங்கியமை தொடர்பில் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் அந்நாட்டு மத்திய நீதிமன்றிற்கு இது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த ஆலயத்தினை உலகத் தமிழர் இயக்கம் நடத்திய...

ஐஎஸ்க்கு எதிரான வான் தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் – பிரெஞ்ச் பிரதமர்

சிரியா மற்றும் இராக்கில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளிக்கு எதிரான வான் தாக்குதல்களை அதிகரிக்கப்போவதாக பிரான்ஸின் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந்த் தெரிவித்துள்ளார். பாரிஸில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரனுடன் பேச்சு நடத்தியபிறகு பேசிய ஒல்லாந்த், ஐஎஸ் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், பிரெஞ்ச் விமான தாங்கிக் கப்பலான ஷார்ல் த கோலும் கலந்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். சிரியாவில்...

பிரான்சில் மக்களின் குடிநீரை குறிவைக்கும் ஐ. எஸ் ???

பிரான்சில் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இரசாயனங்களை கலந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதால் அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள Necker Paediatric மருத்துவமனையில், தொற்றுநோய் பாதுகாப்பு உறைகள், பாலித்தீன் பூட்ஸ், கையுறைகள் மற்றும் நுண்ணுயிரிகளிலிலுந்து காக்கும் முகமூடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுவிட்டதால், ஐ.எஸ் தீவிரவாதிகள்...

ஆப்கான், பாகிஸ்தானில் நிலஅதிர்வு

வடக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் சில பகுதிகள், வட இந்தியாவில் தில்லி உள்ளிட்ட இடங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று அதிலை 2.16 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி இருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் அச்சத்தில் வெளியே ஓடிவந்துள்ளனர்....

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பார்க் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்லியன்ஸ் பார்க் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானதாகவும், மேலும் 16-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், காயமடைந்தவர்கள் அருகில்...

மதத்தை கைவிட்டார்’:தலையை வெட்டிக் கொல்ல சவுதி நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி, ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞரும், கலைஞருமான அஷ்ரஃப் ஃபயாத் தான் ஒரு உண்மையான முஸ்லிம் என்று வலியுறுத்துகிறார். கடவுளை சபித்தார் மற்றும் நாத்திகக் கொள்கைகளை ஊக்குவித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு...

மாலி ஹோட்டலுக்குள் ஆயுததாரிகளின் பிடியில் ‘யாரும் இல்லை’

மாலியின் தலைநகர் பமாகோவில் ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்த இஸ்லாமியவாத ஆயுததாரிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் பிடியில் 'இனி யாரும் இல்லை' என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ரடிஸ்ஸன் ப்ளூ ஹோட்டலுக்குள் நுழைந்த ஆயுததாரிகள்,'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி, உள்ளே 170 பேரை பிடித்து வைத்திருந்தனர். அதனையடுத்து, அதிரடியாக நுழைந்த சிறப்புப் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த...

வெள்ளை மாளிகையை தகர்ப்போம்: ஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய வீடியோ

பாரீஸ் நகரில் கடந்த 13-ந் தேதி துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் தீவிரவாதிகள் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களில் 129 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இதைத் தொடர்ந்து சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து பிரான்ஸ் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தன. ஈராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்க கூட்டுப்படைகளும்,...

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் கதி இன்னும் தெரியவில்லை

இலங்கையின் போர்ச் சூழலில் காணாமல் போயிருப்பவர்களின் பிரச்சினை ஒருபுறமிருக்க, இறுதி யுத்தம் நடைபெற்ற கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றவர்களில் பலரைக் காணவில்லை என்று அவர்களுடைய உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இந்தியக் கடற்பரப்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற படகொன்றில் பயணம்...

சீன, நார்வே பிணைக்கைதிகள் படுகொலை

சிரியா, ஈராக், லெபனான் போன்ற நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நாடுகளுக்கு வருகிற மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களை கடத்திச்சென்று, பிணைக்கைதிகளாக வைத்திருந்து, கொலை செய்வதை ஐ.எஸ். தீவிரவாதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், சீனாவை சேர்ந்த பான் ஜிங்குய், நார்வே நாட்டின் ஓலே ஜோஹன் கிரிம்ஸ்கார்ட் ஆப்ஸ்டெட் ஆகிய 2 பேரை...

நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்று கேட்ட இளைஞருக்கு பாரீஸ் மக்களின் பதில் – வீடியோ

பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் நடத்தி கொலைவெறி தாக்குதல் நடத்திய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்திய போது, கண்களை கட்டியப்படி ஒரு இஸ்லாமிய இளைஞர் நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார். பாரீஸ் மக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரை கட்டியணைத்தனர். பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள்....
Loading posts...

All posts loaded

No more posts