Ad Widget

‘பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்னதாக பிரார்த்தனை செய்ய கட்டாயப்படுத்தினர்’

ஐ.எஸ். தீவிரவாதிகள் ‘பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்னதாக பிரார்த்தனை செய்ய கட்டாயப்படுத்தினர்’ என்று அவர்களிடம் பாலியல் அடிமையாக சிக்கி உயிர்பிழைத்த பெண் தெரிவித்துஉள்ளார்.

ISIS-sex-slave-survivor-They-forced-us-to-pray-before-raping

சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கிய பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் அடிமைகள் ஆக்கி கொடுமை செய்து வருகின்றனர். அவர்களிடம் சிக்கி உயிர்பிழைத்த பெண்கள் தெரிவிக்கும் தகவலானது அனைவரது கண்களிலும் கண்ணீரை வரச்செய்யும் விதமாக உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமையாக அகப்பட்டு உயிர்பிழைத்த யாழிடி இனத்தை சேர்ந்த 21 வயதுபெண் நாதியா முராத் பேசுகையில்,

ஈராக்கில் தீவிரவாதிகள் என்னை சிஞ்ஜார் டவுனில் என்னுடைய வீட்டில் இருந்து சிறைபிடித்தனர், பாலியல் அடிமையாக விற்பனை செய்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகள் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களில் நானும் ஒருவர். ஐ.எஸ். தீவிரவாதிகள் என்னுடைய கிராமத்திற்குள் நுழைந்ததும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் இளைஞர்களை கொலை செய்தனர். மறுநாள் ஒரு வயதான பெண்ணை கொலை செய்தனர். பின்னர் என்னையும், அங்கிருந்த பிற இளம்பெண்களையும் கடத்தி மொசூலுக்கு கொண்டு சென்றனர்.

”மொசூல் நகருக்கு சென்றபோது ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் அடிமையாக விற்கப்பட்டதை பார்த்தேன். தீவிரவாதிகள் என்னை அழைத்து செல்ல விரும்பினர். அவர்களைவிட கொடூரமானவர்களை நான் பார்த்ததே கிடையாது. தீவிரவாதிகள் என்னையும், பாலியல் அடிமையாக சிக்கிய பிற பெண்களையும் பிரார்த்தனை செய்யுமாறு வலியுறுத்தினர் பின்னர் பாலியல் பலாத்காரம் செய்தனர். விலங்குகளுக்கு உள்ள மதிப்பு கூட எங்களுக்கு கிடையாது. அவர்கள் குழுவாக பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அவர்களுடைய மனதை கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாது. அவர்களுடைய கோர்ட்டில் எங்களுடைய பெயர் மற்றும் போன் நம்பர் அடிமைகளாக இருக்கும். அவர்களுக்கு தேவைப்படும் போது எங்களை அழைப்பார்கள், விற்பனை செய்வார்கள் என்று கூறிஉள்ளார்.

இங்கிலாந்து பத்திரிக்கைக்கு அளித்து உள்ள பேட்டியில் முராத், என்னை வாங்கியவரிடம் இருந்து தப்பிஓடி வந்துவிட்டேன் என்று கூறிஉள்ளார். இஸ்லாமியம் என்ற போர்வையில், மாறுவேடமிட்ட பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவள் நான், அனைத்து குற்றங்களும் இஸ்லாமியம் என்ற பெயரால் செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

Related Posts