அமெரிக்காவில் மிக அதிக வருமானம் பெறும் உயர் அதிகாரியாக கூகுள் (Google) நிறுவனத்தின் தலைவரான, இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை தெரிவாகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பிறந்தவரான43 வயதான சுந்தர் பிச்சை, கடந்த அக்டோபரில், கூகுள் அதன் தாய் நிறுவனமான, ஆல்பபெட், நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார்.
அவருக்கு சுமார் 200 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள கூகுள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இதன் மூலம் அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு சுமார் 650 மில்லியன் டொலர்களாக உயர்ந்திருக்கிறது.