- Friday
- November 21st, 2025
வடமாகாண சபை தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, யாழ். பல்கலைக்கழகத்தின் துணையோடு நல்லூர் என்ற புனித நகரத்தையும் அதன் பண்பாட்டு சிறப்பையும் அதனோடு இணைந்த பண்பாட்டு எச்சங்களையும் பாதுகாக்க முன்வரவேண்டும் என யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பதில் தலைவர் செ.கிருஸ்ணராஜா திங்கட்கிழமை (01) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை...
வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களை வன்னிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யும் மாகாண கல்வி திணைக்களத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா திங்கட்கிழமை (01) தெரிவித்தார். வன்னி போன்றே வலிகாமம் கல்வி வலயமும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். எமது கல்வி வலயத்தில் பாட ரீதியான ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ள நிலையில் வன்னிப் பகுதிக்கு...
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகிய வடமராட்சியிலுள்ள மூன்று கிராமங்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை (30) விஜயம் செய்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உலர் உணவுகளை வழங்கினர். வடமராட்சியிலுள்ள இராஜகிராமம், பொலிகண்டி மற்றும் தும்பளை கிழக்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கு தலா 500 ரூபாய் பெறுமதியான உலர்...
கடந்த 2013ஆம் ஆண்டு நிலவிய வரட்சியால் பாதிக்கப்பட்ட 7,761 யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு தேசிய காப்புறுதி நிதியத்தால் நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ககமநலசேவைகள் திணைக்கள வடமாகாண பிரதி ஆணையாளர் எம்.பற்றிக் நிறைஞ்சன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் அழிவின் தன்மை மற்றும் அழிவடைந்த பயிர்ச்செய்கைக்கான நிலப்பரப்பின் அளவுக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்குவதற்கான...
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போய் மீண்டும் கரையொதுங்கிய மீனவர்களின் மூழ்கிய படகு மற்றும் வலைகளை மீட்டுக்கொடுப்பதுடன், அந்த மீனவர்கள் தொழில் செய்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். பருத்தித்துறை, சக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்ராசா நித்தியசீலன் (வயது 31), லூசியஸ் ஜெயபாலன் (வயது 28), செபமாலை றோபேர்ம்...
வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி செய்தமை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். வல்வெட்டித்துறை பொலிஸ் பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 24 இலட்சம் ரூபாவினை ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார். எனினும் நீண்ட நாட்களாக...
உயிரைப் பணயம் வைத்து நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். (more…)
பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளியில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது. (more…)
வடக்கு மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கின்றது என்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்னாவதென்பதையும் வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளது. கூட்டமைப்பின் பலம் அரசாங்கத்திற்கு தெரியாவிடின் கடந்த கால தேர்தல் முடிவுகளை மீட்டுப்பாருங்கள் என தெரிவிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவிணையே எடுக்கும்...
யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவரும், கோப்பாய் மற்றும் யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து தலா மூவருமாக ஒன்பது பேர் இவ்வாறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் இந்தமாதம் யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய்த்தொற்றுக்கு இலக்காகி சிகிச்சைக்கு...
மத்திய அரசாங்கத்தினால் மட்டுமல்ல வடக்கு மாகாண அரசாலும் தாம் கைவிடப்பட்டுள்ளதாக உணர்வதாக வலி.வடக்கிலிருந்து இடம்பெயந்து அகதி முகாம்களில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டனர். நேற்று இப்பகுதி மக்கள் மழையால் எதிர்கொள்ளும் அவலங்களை பார்வையிட்ட செய்தியாளர்களிடம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் இருக்க இடம்கூட இன்றி அந்தரிக்கும் இந்த மக்கள்,...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஆட்சிக்கு வருவாரானால் அவர் நிச்சயமாக ஒரு சர்வாதிகாரியே. இவ்வாறு தெரிவித்துள்ளார் பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. பொலன்னறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றகையில் தெரிவித்தவை வருமாறு:- நாடாளுமன்றத்தில் மூன்றில்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டளஸ் அழகப்பெரும, அநுர பிரியதர்ஷன யாப்பா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி, கல்முனை மாநகர...
நாட்டை காக்கும் நீலப்படையணி' என்னும் தொனிப் பொருளில் ஆளும் கட்சி நாடு முழுவதிலும் கூட்டங்களை நடாத்தி வருகின்றது. அதன் ஓர் கட்டமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 30ம் திகதி யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லுரியில் யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இந்தக்...
இன்று உலக எயிட்ஸ் தினமாகும். "இன்றே பரிசோதித்துக் கொள்ளுங்கள்" என்பதே இம்முறை உலக எயிட்ஸ் தினத்தின் தொனிப்பொருளாகும். 1981ஆம் ஆண்டு ஜுன் 5ஆம் திகதியே முதலாவது எயிட்ஸ் நோயாளி கண்டுபபிடிக்கப்பட்டார். தற்சமயம் உலகம் முழுவதிலும் 35 மில்லியன் பேர் எயிட்ஸ் நோயாளியாளர்களாக உள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை, ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெள்ளவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடமொன்று, ஆடைத் தொழிற்சாலையொன்று, கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள பாரிய காணியொன்று, ட்ரோலர் ரக படகுகள் உட்பட சில படகுகள், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள...
தமிழரின் உரிமைப் போராட்டம் முக்கியமான காலகட்டத்தில் இருப்பதனால்தான் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரப்பட்டு முடிவெடுக்காமல் உள்ளது. பொது எதிரணி, அரச தரப்பு வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை உன்னிப்பாக அவதானித்த பின்னரே யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும்.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த்...
யாழ்ப்பாணத்தில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடமராட்சி வடக்கு பகுதியைச் சேர்ந்த 1,118 குடும்பங்களைச் சேர்ந்த 3,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் ரி.ஜெயசீலன் ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்தார். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்த மக்களில் 255 குடும்பங்களை சேர்ந்த 938 பேரை செம்மின், பொலிகண்டி, உதயமலர், திருமால்...
யாழ்.கல்வியங்காட்டு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முற்பட்ட இரண்டு சந்தேகநபர்களை சனிக்கிழமை (29) மாலை கைது செய்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில், வீட்டிலிருந்தவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கொழும்புக்கு பணியொன்றின் நிமித்தம் சென்றிருந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை (29) மாலை வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடிக்கும்...
யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பலாலி படைத்தலைமையகத்தில் புதிதாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் உதயப்பெரேரரா திடீரென கொழும்புக்கு அழைக்கப்பட்டார். குறித்த இடத்தை நிரப்புவதற்கு இரேலுக்கான பிரதித் தூதுவராக பதவியேற்றிருந்த ஜெகத் அல்விஸ் யாழ். மாவட்டத்தின் புதிய...
Loading posts...
All posts loaded
No more posts
