ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கவேண்டும் என்பது தொடர்பிலான யோசனையை அறிக்கையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் சில தினங்களில் சமர்ப்பிக்கவுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
புதுடில்லிக்குச் சென்றுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடு திரும்பியதும் அவரிடம் இந்த யோசனை அடங்கிய அறிக்கையைக் கையளிப்பதற்கு வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் தீர்மானித்துள்ளது என அறியக் கிடைந்துள்ளது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கவேண்டும் என்ற முடிவை எடுக்கும்போது தமது யோசனையையும் கவனத்தில்கொள்ளும் எனத் தாம் நம்புவதாக சிவில் சமூகத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.