Ad Widget

சிறப்பான பணியை யாழ். மாவட்ட மக்களுக்கு வழங்குவேன் – புதிய டி.ஐ.ஜி

யாழ். மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரவீந்திர வைத்யலங்கார பதவியேற்றுள்ளார்.யாழ். மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த றொஹான் டயஸ் மாற்றலாகிச் சென்றுள்ளதையடுத்து புதிய டி.ஐ.ஜியாக ரவீந்திர வைத்யலங்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

raveenra-dig-police

பதவியேற்பு நிகழ்வுகள் காலை 9.45 மணிக்கு யாழ். பொதுநூலகத்திற்கு முன்னால் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.

அத்துடன் மதத்தலைவர்களின் ஆசியியுடன் கையெழுத்திட்டு உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.

ரவீந்திர வைத்யலங்கார யாழ். மாவட்டத்தின் 31 ஆவது பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்றபின் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் நான் கடமையாற்றுவது புதியதல்ல. மூன்றாவது தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளேன். முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ் எவ்வாறு யாழ். மாவட்ட மக்களுக்கான பணிகளை மேற்கொண்டாரோ அதேபோல நானும் அதிகாரிகளுடன் இணைந்து தொடருவேன் என்றார்.

Related Posts