Ad Widget

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ புலம்பெயர்ந்தவர்கள் முன்வாருங்கள்’

யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்க புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன், சனிக்கிழமை (06) கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

sivaji

யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

மத்திய அரசாங்கமோ மாகாண சபையோ தேவையான உதவிகளை உரிய முறையில் இன்னும் வழங்கவில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களும் இடம்பெயர்ந்தவர்களும் தான் மறுபடியும் இந்த அனர்த்தத்தால் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் செய்யக்கூடிய உதவிகளை எம் மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இன்பத்திற்கு உதவி செய்யவிட்டாலும் அவர்களின் துன்பத்திற்கு முடிந்தளவு உதவிகளை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கருத்துத்தெரிவிக்கையில்,

இந்த முறை ஏற்பட்ட அனர்த்தத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாகாணசபையில் உத்தியோகபூர்வ அனர்த்த நிவாரண நிதி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மக்களுக்கு உதவிகளை வழங்க முடியும்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் உதவிகள் வழங்கப்பட்டுள்ள போதும் நிறைவான முறையில் அவர்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை.

புலம்பெயர்ந்தவர்கள் உதவிகளை வழங்குவதற்கு இங்கு எந்த தடையும் இல்லை எனவே முடிந்த உதவிகளை உடனடியாக வழங்க அனைவரும் முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்;.

Related Posts