Ad Widget

சிரமதானத்தில் ஈடுப்பட்ட யாழ். பொலிஸார்

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 கிராம அலுவலர்ககள் பிரிவுகளில் சிரமதானப் பணிகளை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (07) முன்னெடுத்தனர்.

ஜே- 81, 84, 86 மற்றும் 87 ஆகிய கிராமஅலுவலர் பிரிவுகளில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை இந்த சிரமதான பணிகளில் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர்.

கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக இந்த பிரதேச மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts