Ad Widget

மகிந்த சிந்தனையில் பொலிஸாருக்கும் மோட்டார் சைக்கிள்கள்

யாழ். மாவட்டத்திலுள்ள 9 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸாரில் தெரிவு செய்யப்பட்ட 30 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

மகிந்தோதய திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அதனொரு அங்கமாக குறித்த திட்டத்தின் கீழ் பொலிஸாருக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் யாழ்.மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸாரில் தெரிவாகிய 30 பேருக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரசாத் ரணசிங்க தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு யாழ். மாவட்டத்தில் உள்ள 9 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரிகள், அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

Related Posts