- Thursday
- September 18th, 2025

விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினரான நகுலேஸ்வரன் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு பேரில் நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். கிராம அலுவலர் உட்பட மூவர் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிருப்பு பகுதியில்...

கிழக்கில் முதலமைச்சர் பதவியைக் கோரும் கூட்டமைப்பின் கருத்து நியாயமானது! – மைத்திரி, ரணில் தெரிவிப்பு
"தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் - அதிக உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் நாம் தெளிவாக எடுத்துரைத்தோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 20 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை மற்றும் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) என்பன மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சின்னையா சிவராசா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நகர எழுச்சி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேலணை பொதுச்சந்தை மற்றும் வடக்கின்...

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். தகுதி அடிப்படையில் மிகமூத்த அதிகாரியான குமாரசிங்க சிறிசேன, டெலிகொம் நிறுவனத்தின் தலைமைக்கு பொருத்தமானவர் என்ற காரணத்தினாலேயே இப்பதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை அரச நியமனங்களுக்கு பயன்படுத்தமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - தேர்தல் காலத்தில்...

தற்காலிக, அமைய ( நாளாந்த),பதில் கடமை, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு 2015 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக நிரந்தர பதவியினை வழங்குதல் தொடர்பில் 2014.11.12 ம் திகதிய அரசாங்க சுற்றறிக்கை யின் படி (http://www.pubad.gov.lk/web/eservices/circulars/2014/T/25_2014(i)(t).pdf) சகல திணைக்களங்கள் மாகாணசபைகள் கூட்டுத்தாபனங்களில் இருந்து விபரங்கள் கோரப்பட்டிருந்த போதிலும் வடமாகாண அரச நிறுவனங்கள் இது தொடர்பில் அக்கறை செலுத்த...

புதிய இராணுவ ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜெ.ஜயவீர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார். இப்பதவியில் இருந்த ருவான் வனிகசூரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ தலைமையகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றது. எனவே தமது பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்புவோர் உடனடியாக தத்தமது விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகிறன்றனர். இம்முறை மேற்படி பரீட்சைக்கு 2...

நாடாளுமன்ற அமர்வில் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளரினால் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவ் ஊடக அறிக்கையில் ..... ஆட்சிமாற்றம் ஒன்றின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று வாக்களித்துள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நாம் ஆதரவளிப்போம். இதேவேளை...

எதிர்வரும் ஜூலை மாதம் முதல், மின்சார கட்டண அறவீட்டு முறையில் மாற்றம் செய்யப்படும் என மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வியாழக்கிழமை(22) இதனை தெரிவித்தார்.

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதையடுத்து தனியார் பஸ்கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். பஸ் கட்டணங்கள் 7 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதன்பிரகாரம் ஆரம்பக்கட்டணம் 8ரூபாவாகும்

சுன்னாகம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருந்தாக கூறப்படும் நோர்தன் பவர் நிறுவனத்தை உடனடியாக மூடுமாறு மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம், தெரிவித்தார். அமைச்சருடன் கொழும்பில் மேற்கொண்ட சந்திப்பில் அமைச்சர் இந்த...

எரிபொருள் விலை குறைப்பின் பின்னர், கூடிய விலையில் எரிபொருள் விற்பனை செய்யும் சம்பவங்கள் ஏதும் இடம்பெற்றால், அது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட முறைப்பாட்டு பிரிவுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் மின்வலும் மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று கேட்டுக்கொண்டுள்ளது. அவசர தொலைபேசி இலக்கம் - 0115 243 243 அல்லது தொலைபேசி இலக்கங்கள் -...

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்களுக்கும் தனியார் பஸ் சங்க ஊழியர்களுக்கும் இடையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் புதன்கிழமை (21) பிற்பகல் கைகலப்பு ஏற்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வட்டக்கச்சி வழித்தட சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை பேருந்தை, வட்டக்கச்சியில் இடைமறித்த தனியார் பஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள்,...

"ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயை புலிகள் கொன்றனர் என்பதில் சந்தேகம் இருக்கிறது" இப்படி தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்: "அரசியல்வாதிகளான நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன்,...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும் என்று உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க நேற்றுப் புதன்கிழமை கொழும்பிலுள்ள உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலுள்ள கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை கண்டித்து கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கல்லூரி முன்றலில் புதன்கிழமை(21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் பொதுக்கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டிருப்பதாக, தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமாரால் அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 10 நிமிடங்கள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, மாணவர்களும் ஆசிரியர்களும் கலைந்து...

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த 2014ஆம் ஆண்டு 303 வீடுகள் யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் பரந்த அடிப்படையிலான கடன்திட்டம், வருமானம் குறைந்தவர்களுக்கான வீடமைப்பு திட்டம்,...

குடிநீரில் எண்ணெய் கலப்பு பிரச்சினைக்கான செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்களை இனியும் முன்னெடுப்பது பயனற்றதாவே அமையும் என்று வடமாகாண விவசாய, சுற்றுச் சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தெரிவித்தார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள், கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு...

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தனக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தனது வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகளை சரத் பொன்சேகா, 2010ஆம் ஆண்டு இழந்தார். இராணுவ நீதிமன்றம் விதித்த தீர்ப்பை 2011ஆம் ஆண்டு...

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் பிரதியமைச்சர்கள் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால் அமைச்சர்: அப்துல் ஹலீம் மொஹமட் ஹசிம் இராஜாங்க அமைச்சர் சுகாதார இராஜாங்க அமைச்சர்: மொஹமட் தம்பி ஹசன் அலி பிரதியமைச்சர்கள் சமூக சேவைகள், நலன்புரி...

All posts loaded
No more posts