Ad Widget

ஜனாதிபதி, சாரணர் விருதுக்கான நேர்முகத்தேர்வு

இலங்கை ஜனாதிபதி, சாரணர் விருதுக்கான நேர்முகத் தேர்வு இலங்கை சாரணர் தலைமையக பிரதி பிரதம ஆணையாளர் எஸ்.ஏ.அமரசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றது.

scout

யாழ்.மாவட்ட சாரண ஆணையாளர் ச.சௌந்தரராஜனினின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நேர்முகத் தேர்வில், இலங்கை சாரணர் தலைமையகத்தைச் சேர்ந்த ரூபன் ஆரியரத்தின, எஸ்.சௌந்தரராஜன், சரத் சோம விக்கிரம சிங்க, ஆர்.சசீதரன், ஜெகநாதன் அமிர்தன் ஆகியோர் பரீட்சகர்களாக கலந்துகொண்டார்கள்.

இலங்கை ஜனாதிபதி சாரணர் விருதுக்கான நேர்முகத்தேர்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 23 சாரணர்கள் தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் சாரணியர்களுக்கு இந்த நேர்முகத்தேர்வு 2 ஆவது தடவையாக யாழ். மாவட்டத்தில் இடம்பெறுகின்றது.

சென்ற வருடம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இந்த நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. அதற்கு முன்னைய ஆண்டுகளில் கொழும்பில் இந்த நேர்முகத் தேர்வு இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts