Ad Widget

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்.வருகின்றார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.

maithiripala srisena-my3

யாழ்.மாவட்ட செயலகத்தில், அவரது தலைமையில் வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் பங்கேற்பதுடன் வடக்கு அமைச்சரவையும் பங்கெடுக்கவுள்ளது.

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், முதன் முதலாக வடக்கு மாகாணத்துக்கு-யாழ்.மாவட்டத்துக்கு மைத்திரிபால சிறிசேன வரவுள்ளார்.

அவரின் தலைமையில் இடம்பெறும் மாகாண ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் மத்திய அரசின் 9 அமைச்சர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுக்கவுள்ளனர்.

Related Posts