Ad Widget

பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவர், கடமைகளை பொறுப்பேற்பு

பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.விஜிந்தன், வியாழக்கிழமை (26) பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

k-vijinthan

கடந்த 2ஆம் திகதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனால் பனை அபிவிருத்திச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு, 25 ஆம் திகதி பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

வடமாகாண ஆளுநரின் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக முன்னர் இவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவியேற்ற அவர் கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை நிலுவையிலுள்ள வேலைத்திட்டங்களை குறுகிய காலத்துக்குள் செயற்படுத்துவதுடன் தொடர்ந்து இந்த சேவைகளை அனைவருடனும் ஒற்றுமையாக இணைந்து செயற்படுத்துவேன் என அவர் கூறினார்.

Related Posts