புதிதாக அண்மையில் நியமனம் பெற்ற இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் எ.டபிள்யூ.ஜே.கிரிசாந்த டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
புதிதாக இராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்ட இவர் தனது நியமனத்தின் பின் நேற்று ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இலங்கை இராணுவத்தில் 36 வருட கால சேவையை பூர்த்தி செய்துள்ள மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா 2013 ஆகஸ்ட் மாதம் முதல் 2014 மே மாதம் வரை இலங்கை இராணுவத்தில் பதவி நிலை பிரதானியாக செயலாற்றினார்.
இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியில் படைத் தலைவராகவும் செயலாற்றிய அவர் திறமையான அனுபவமுள்ள அதிகாரியாவார். அவர் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.
இச்சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆசிர்வாதத்தினையும் வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவித்துள்ளார். 21 ஆவது இராணுவத்தளபதியாக கடந்த 23 ஆம் திகதி இவர் நியமனம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.