Ad Widget

ஐ.நா. உயர் அதிகாரி சனியன்று கொழும்பு வருகிறார்!

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன்டே இலங்கை வரவுள்ளார்.

அவர் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு பயணமாவார் என்று ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

ஜெப்ரி பெல்ட்மன்ட் தனது இலங்கை விஜயத்தின் போது உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். அத்துடன், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜெப்ரி பெல்ட்மனின் முதலாவது இலங்கை விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts