- Wednesday
- July 16th, 2025

விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவும் வலுவான நிலையில் காணப்பட்டதால் சிறந்த சுகாதார சேவையை வழங்கக்கூடியதாக இருந்ததெனவும் குறிப்பிட்டுள்ள வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், தற்போது அவ்வாறான ஒரு நிலை இல்லையெனக் குறிப்பிட்டுளார். முல்லைத்தீவு தேவிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே...

இறுதி யுத்தம் முடிவடைந்த போது ராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தெரியும் என முன்பு சாட்சியம் அளித்த ராணுவ அதிகாரி ஒருவர், நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அதுபற்றி எதுவும் தெரியாது எனத் தெரிவித்திருக்கிறார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராகிய நடேசு முரளிதரன், அவருடைய மனைவி ஜெயக்குமாரி, அவர்களுடைய...

இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலய காணி, எதிர்வரும் 8 ஆம் திகதி, கையளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தற்போது தரம் 06 தொடக்கம் உயர்தரம் வரை சுமார் இரண்டாயிரத்து 680க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். கிளிநொச்சி...

முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியில் அமைக்கப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை நேற்று (திங்கட்கிழமை) மாலை திறந்துவைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த சிலையின் தோற்றம் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவிவந்திருந்த நிலையில், சர்ச்சைகளை கடந்து குறித்த சிலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர். முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில்...

நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்யும் முன் அவா் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கணவன்...

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி இரணைமடு சந்தியில் ஒன்று திரண்டு வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளாகிய தம்மை விடுதலை செய்யும்போது வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என உறுதியளித்த போதிலும், இன்றுவரை தாம் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமக்கு வேலை...

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இச்செயலானது காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேயின் கொடிய செயலைவிட மிக கொடுமையானதும் கோழைத்தனமானதுமாகும் என்றும் விசனம் வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவமோகனின் ஏற்பாட்டில்...

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் என்கின்ற சொற் பிரயோகங்களை சர்வதேசஅளவில் மாத்திரமன்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் தமது சுயலாபங்களுக்கு பயன்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை பொறுத்தவரையில் அது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல. இன்றுவரைக்கும் அது ஒரு பிரச்சினையாக இருந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் புதிய...

2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது கணவரை மீட்டுத் தாருங்கள் என புவனேந்திரராசா இராசேஸ்வரி என்ற குடும்பத் தலைவி கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தினரின் அறிவிப்புக்கேற்ப சரணடைந்த தனது கணவனை மனநோயாளியாக்கி காணாமல் போகச் செய்துள்ளனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சி – கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான அருணாச்சலம்...

“கேப்பாப்புலவுக்கு வருகை தரும் ஜனாதிபதியிடம் இராணுவ முகாம்களை அகற்றி கேப்பாப்புலவு கிராமத்தினை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம்” என கேப்பாப்புலவு மக்கள் தெரிவிக்கின்றனர். “இடம்பெயர்ந்த போது, இராணுவத்தினர் எமது கிராமத்தினை முழுமையாகக் கைப்பற்றி இராணுவ முகாம்களை எமது பூர்வீக நிலத்தில் அமைத்தனர். எம்மை நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்து வந்த இராணுவத்தினர், 2012ஆம் ஆண்டில்...

முத்தையன்கட்டுக்குளத்தை நம்பி விவசாயத்தை மேற்கொள்ளும் 1000 பேருக்கு வரட்சி நிவாரணமாக வடமாகாண விவசாய அமைச்சு நேற்று சனிக்கிழமை (31.12.2016) உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது. ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார். முத்தையன்கட்டுக் குளத்தின்கீழ் பயிரிடப்படும் நிலப்பரப்பின் அளவை 6000...

அக்காவுக்கு ஏதாவது நடந்தால் குண்டுவைக்கவும் தயங்கமாட்டேன் என கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, அண்மையில் நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பார் என கருத்து வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்...

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொடுப்பது தொடா்பாக உரிய அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு விபரங்கள் அனுப்ப வேண்டியிருப்பதனால் வாகனங்களை பாவிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய விபரங்களை கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோா் சங்கத்திடம் வழங்குமாறு குறித்த சங்கம் அறிவித்துள்ளது. சாரதி அனுமதி பத்திரம் தேவையான மாற்றுத்திறனாளிகள் முதலில் தங்களுடைய விபரங்களை கிளிநொச்சி உதயநகா்...

கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் புதன்கிழமை (28) மாலை நேர வகுப்புக்கள் முடிந்து மாணவிகள் சென்ற வேளை சில இளைஞர்கள் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளனர். இவ்விடயம் சிறுவர்...

யுத்தத்திற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில், ஒரு இலட்சத்திற்கும் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரத்தின்படி, 42 ஆயிரத்து 158 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 750 அங்கத்தவர்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர். கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவான மக்கள் மீள்குடியேறியுள்ளனர். இதன்பிரகாரம்...

முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை பகுதியில் இராணுவத்தினர் பயணித்த அம்புலன்ஸ் வண்டி, துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மீது மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவிடத்திலேயே உயிரிழந்துள்ளார். வற்றாபளை பகுதியிலிருந்து முள்ளியவளைநோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, பின்னால் வந்த கேப்பாபுலவு இராணுவ முகாமின் இராணுவ அம்புலன்ஸ்வண்டி மோதியது. இன்று புதன்கிழமை காலை (28) இடம்பெற்ற இச்சம்பவத்தில் வற்றாப்பளையைச் சேர்ந்த...

எங்களுடைய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவர் பிரதமராகியிருப்பார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று 28-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், கடந்த செப்டம்பர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...

தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் எமது உறவுகளிடம் இரக்கம் காட்டுங்கள் என, அவர்களது பெற்றோர் மற்றும் மனைவிமார் உள்ளிட்ட உறவினர்கள் இன்று (27) கிளிநொச்சியில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் பத்து பேர் மற்றும் மண்டபம் முகாமில் இருக்கும் பெண்ணொருவர் ஆகியோரின் உறவுகள் கிளிநொச்சியில்...

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர்பகுதியில் இந்திய நாட்டின் அகிம்சாவாதியான மகாத்மா காந்திக்கான நினைவுச்சிலை அமைக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் நேற்றையதினம் காலையில் அந்தச் சிலை உடைந்துவிழுந்த நிலையில் காணப்பட்டிருக்கின்றது. இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் முறையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணையில் முல்லைத்தீவு...

எமது சமுதாயத்தின் இருப்பை பாதுகாத்து தக்கவைக்கும் பாரிய பொறுப்பு இளைஞர் யுவதிகளிடமே உள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து வெளிநாட்டு மோகம் காரணமாக வெளிநாடுகளை நோக்கி படையெடுப்பதானது, எதற்காக போராடினோம் என்ற கேள்வியை ஏற்படுத்துமென அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி உருத்திரபுரம் உழவர் ஒன்றிய சனசமூக...

All posts loaded
No more posts