Ad Widget

நுண் கடன் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் தற்கொலை

நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலை செய்யும் முன் அவா் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் கணவன் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் அவா் திரும்பி வரவில்லை எனவும் தனது காணியை விற்று தான் பெற்ற கடன்களை செலுத்துமாறும், தனது இறுதி கிரிகைகள் முடிந்ததும் பிள்ளைகளை சிறுவா் விடுதியில் சோ்த்து விடுமாறும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

கணவனால் கைவிடப்பட்டுள்ள குறித்த பெண்ணுக்கு பன்னிரண்டு மற்றும் மூன்று வயதில் பெண் பிள்ளைகளும், எட்டு வயதில் மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதுகுடியிருப்பு பொலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Related Posts