Ad Widget

போர் வெடிக்கும்! கிளிநொச்சியில் துண்டு பிரசுரங்கள்!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக நிலங்களைத் துண்டாடுவதற்கு துணைபோகக்கூடாது எனவும், அவ்வாறு துணைபோனால் மீண்டும் போர்ச்சூழல் உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தலைப்பிடப்பட்ட குறித்த துண்டுப்பிரசுரங்கள் நேற்றைய தினம் கிளிநொச்சியின் பல பிரதேசங்களில் வீசப்பட்டுள்ளதால் அங்கு ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதேவேளை, கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை இன்று மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் இணைந்து நாட்டியிருந்தனர். கல்லறை அமைக்கும் பணி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே கிளிநொச்சி நகரெங்கும் இவ்வாறான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts