Ad Widget

மாவீரன் பண்டாரவன்னியனுக்கு முல்லைத்தீவில் சிலை வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியில் அமைக்கப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை நேற்று (திங்கட்கிழமை) மாலை திறந்துவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த சிலையின் தோற்றம் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவிவந்திருந்த நிலையில், சர்ச்சைகளை கடந்து குறித்த சிலை திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையான 2000 சதுரமைல் நிலப்பரப்பை ஆட்சி செய்த மன்னனே பண்டாரவன்னியன். ஒல்லாந்தர் கோட்டைகளை வென்று ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாது போராடிய மாவீரன் பண்டாரவன்னியன், இம் மண்ணில் வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாய் வாழ்ந்து காட்டிய மாவீரன் ஆவார்.

Related Posts