Ad Widget

முன்னாள் போராளிகள் போராட்டம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி இரணைமடு சந்தியில் ஒன்று திரண்டு வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளாகிய தம்மை விடுதலை செய்யும்போது வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என உறுதியளித்த போதிலும், இன்றுவரை தாம் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்காகத்தான் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் பண்ணை வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், தம்மை அதில் உள்வாங்கவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related Posts