நத்தார் தினத்தில் வறுமையில் வாழும் முதியவர்களுக்கு, பெண்களின் உள்ளாடைகளை வழங்கிய கொடை வள்ளல்கள்!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் நேற்று 25-12-2016 நத்தார் தினத்தில் முதியவர்களுக்கு பொதிகள் வழங்ப்படுவதாக அறிவித்து அந்த கிராமத்தில் வாழ்கின்ற 136 முதியவர்களை அங்கு பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துள்ளனர். காலை பத்து மணிக்கு குறித்த கிராமத்தில் வாழ்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இயலாத நிலையிலும் பொது நோக்கு மண்டபத்தில் ஒன்று கூடியுள்ளனர். கிராமத்தின் முதியோர் சங்கமும், வெளியில்...

நாளை முல்லைத்தீவில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. செம்மலை மகா வித்தியாலயத்தில் நாளை திங்கட்கிழமை (26.12.2016) பி.பகல் 2 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொள்ள உள்ளார். விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற...
Ad Widget

மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு தீர்மானம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச சபை ஊடாக சிரமதானம் செய்து புனித பிரதேசங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்...

புதுக்குடியிருப்பு கடலிலிருந்து விமானத்தின் உதிரி பாகங்கள் மீட்பு

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி புதுக்குடியிருப்பு கடலில் சிதைவடைந்த விமானத்தின் உதிரி பாகங்கள் சிலவற்றை கடற்படையினர் மீட்டுள்ளனர். இந்த சிதைவடைந்த உதிரிப்பாகங்கள் ரஷ்ய போர் விமானத்தின் உதிரிப்பாகங்களாக இருக்கலாமென்று நம்பப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை மாலை புதுக்குடிருப்பு கடலில் 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்த பாகங்கள் கடலில் மிதந்துகொண்டிருந்தன. இதுதொடர்பாக மீனவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக இவற்றை...

மாணவி ஒருவர் தீ மூட்டி தற்கொலை

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவா் இன்று அதிகாலை தீ மூட்டி தற்கொலை செய்துள்ளாா். இச் சம்பவம் இன்று அதிகாலை மூன்று முப்பதுக்கும் நான்கு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது என உறவினா்கள் தெரிவிக்கின்றனா். தனக்குதானே தீ மூட்டியுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கனகாம்பிகைகுளத்தைச் சோ்ந்த கிருஸ்ணகுமாா் வானுஜா வயது 17...

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடம் கற்கைகள் ஆரம்பம்

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் நேற்று 20-12-2016 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகாில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஏற்கனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில் தற்போது தொழிநுட்ப பீடமும் இயங்க ஆரம்பித்துள்ளது. நாடாளவிய ரீதியில் 23 மாவட்டங்களில் இருந்து 211 மாணவா்கள்...

வன்னி மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான விசேட பணிப்பாளராக பிரபா கணேசன்!

ஜனாதிபதி மைத்திரிபால சி​றிசேனவினால், வன்னி மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான விசேட பணிப்பாளராக, முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபயகோனினால், ​இன்று (20) காலை வழங்கப்பட்டது.

மூளைக் காச்சலால் ஐந்து வயது குழந்தை மரணம்

கிளிநொச்சியில் மூளைக்காச்சல் காரணமாக ஐந்து வயது குழந்தை ஒன்று மரணமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் 18-12-2016 மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரத்தைச்சோ்ந்த விஜயராஜ் விஸ்னுஜன் என்ற குழந்தையே மூளைக்காச்சல் காரணமாக இறந்துள்ளது.சில நாட்களாக காச்சலும் வாந்தியும் காணப்பட்டதாகவும் பின்னா் கடந்த ஞாயிற்று கிழமை மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட...

த.தே.கூட்டமைப்பினர் பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்ய கோரிக்கை!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாவீரா்களையும், மண்ணையும், தமிழ் மக்களையும் மதிப்பவா்களாக இருந்தால் 31 ஆம் திகதி பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவேண்டும் ஈரோஸ் பகிரங்கமா வேண்டுகோள் விடுக்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் போராட்டத்தை மதிக்கிற சக்தியாக இருந்தால், தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும் மதிக்கிறவா்களாக இருந்தால், இந்த மண்ணுக்காக தங்கள் உயிர்களை விட்ட ஆயிரக்கணக்காக இளைஞா் யுவதிகள்...

பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொருத்து வீடு எங்களுக்கு பொருந்தாத வீடு என்ற தொனிப்பொருளில் இன்று காலை 8.30 அளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டம், ஆரம்பமாகியுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65...

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சநிலையிலேயே வாழ்கின்றனர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாக காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட பெண் தலைமைத்துவம் தாங்கும் பெண்களின் பிரதிநிதி கதிர்செல்வம் கருணாநிதி தெரிவித்தார். பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வலுப்படுத்தல், நல்லிணக்க வழிமுறையின் முன்னேற்றப் பாதை, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு ரில்கோ ஹோட்டலில்...

215 குடும்பங்களில் 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக நோய்!

வவுனியா வடக்கின் எல்லைக் கிராமங்களின் நிலக்கீழ் நீர் விரைவாக கல்சிய அதிகரிப்புக்குள்ளாகி வருகின்றது. இதனால் போரில் அழிந்தது போக மிகுதியாக ஊர் திரும்பியவர்களை சிறுநீரக நோய் அரிக்கின்றது. உதாரணத்திற்கு வவுனியா வடக்கில் இருக்கும் கற்குளம் கிராமத்தை எடுத்துக்கொள்வோம். நெடுங்கேணி பிரதேச சபைக்கு கீழ் உள்ள கிராமங்களில் கற்குளம் கிராமமும் ஒன்றாகும். தனி கிராம சேவகர் பிரிவாக...

பொருத்து வீட்டுத்திட்டத்தை எதிர்த்து போராட்டம்

பொருத்து வீட்டுத்திட்டத்துக்குகு எதிர்ப்பு தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடைய நிதிப்பங்களிப்புடன் நிரந்தர வீடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் 13,000...

முல்லைத்தீவில் பெரும்பான்மையை இழக்கும் தமிழ் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக மாறும் நிலை ஏற்படும் என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையாக்குவதற்கான அடித்தளங்கள் இடப்பட்டு வருகின்றன. மக்களிருக்கும் நிலங்களை...

STARTUP WEEKEND நிகழ்வு கிளிநொச்சியில்

Techstar அமைப்பின் வணிக புத்தாக்குநர்களுக்கான Startup Weekend நிகழ்வு, இலங்கையில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில், இவ்வாண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை யாழ்.ரில்கோ விடுதியில் நடாத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இரண்டாவது நிகழ்வு, இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. அடுத்த 3வது நிகழ்வான...

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிளிநொச்சியில் இருவர் கைது

கிளிநொச்சி ஆனந்தபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்த இருவர், ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மதுபான விற்பனை இடம்பெறுவதால் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக தெரிவித்து, கிராம மக்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஒவ்வொன்றும்...

முன்னாள் போராளிகள் அடுத்தடுத்து மரணம்!!

ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டும் சரணடைந்த நிலையிலும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு, விஷ ஊசி ஏற்றியிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் தொடர்ந்தும் வலுப்பெற்று வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா அச்சம் வெளியிட்டுள்ளார். புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், காய்ச்சல் காரணமாக...

முல்லைத்தீவில் குதிரையோடியவர் கைது

முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலய பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் கணிதபாட பரீட்சையில் தோல்வியுற்ற ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுதியவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து உரிய பரீட்சாத்தியையும் கைது...

கொக்குளாயில் விகாரை அமைக்க தனியார் காணியை தாரைவார்த்தவரை அரசாங்க அதிபராக நியமிக்க சதி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பகுதி தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலம் சிங்களக் குடியேற்றங்களுக்கு அபகரிக்கப்பட்டு அங்கு வாழும் தமிழ் மக்கள் அச்சுறுத்தல் காரணமாக தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், அண்மைக்காலமாக கொக்குளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் பிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைத்து வருகின்றார். இதற்குரிய காணியை முல்லைத்தீவு மாவட்ட...

மக்களின் காணிகளை மீள வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

கடந்த கால யுத்தம் காரணமாகவே பொதுமக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றியிருந்ததாகவும் எனினும், யுத்தம் நிறைவடைந்த நிலையில் காணிகளை மக்களிடம் மீளக்கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். பொதுமக்களுக்கும் ஆளுநருக்குமிடையில் நேற்றையதினம் (09) முல்லைத்தீவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2009 ஆண்டுக்குப் பின்னர் கொக்குத்தொடுவாய் முகத்துவாரம்...
Loading posts...

All posts loaded

No more posts