Ad Widget

கூட்டமைப்பும், சர்வதேசமும் சுயதேவைக்கு ”முள்ளிவாய்க்கால்” என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் என்கின்ற சொற் பிரயோகங்களை சர்வதேசஅளவில் மாத்திரமன்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் தமது சுயலாபங்களுக்கு பயன்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை பொறுத்தவரையில் அது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல. இன்றுவரைக்கும் அது ஒரு பிரச்சினையாக இருந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வடமாகாண சபையின் புதிய உறுப்பினரான ஆண்டிஐயா புவனேஸ்வரனை வரவேற்கும் நிகழ்வு உடையார்கட்டு மாகவித்தியாலத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் மாகாணசபை உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாத சூழல் நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் கட்சி சார்ந்து அல்லது எதிர்கால தமது நலன்கள் சார்ந்தே உறுப்பினர்கள் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts