- Monday
- July 6th, 2026
எகிப்து நாட்டின் துறைமுக நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற விமானத்தை ஒரு தீவிரவாதி கடத்தினான். கடத்தப்பட்ட எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS181 தடம் எண் கொண்ட அந்த விமானத்தில் 55 பயணிகளும், விமானி உள்பட ஏழு பேரும் இருந்ததாக தெரியவந்தது. அந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் தீவில்...
கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த நான்கு வௌிநாட்டு பிரஜைகள் மற்றும் 11 ஊழியர்கள் தவிர்த்து ஏனைய அணைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எகிப்து நாட்டின் துறைமுக நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற குறித்த விமானத்தை, அதில் இருந்த பயணி ஒருவரே கடத்தியதாக விமானி கூறியுள்ளார் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. மேலும்,...
எகிப்த்தின் உள்நாட்டு பயணிகள் விமானம் MS181 கடத்தப்பட்டுள்ளது. அலக்சாண்டிரா வில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானமே கடத்தப்பட்டிருக்கிறது. கடத்தப்பட்ட விமானம் தற்போது சைப்பிரஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளதாக தெரியவருகின்றது. இந்த Airbus 320 ரக விமானத்தில் 81 பயணிகள் இருந்ததாக எகிப்தியன் ஏயார் நிறுவனம் கூறுகின்றது. விமானியிடமிருந்து கட்டுப்பாட்டறைக்கு கிடைத்த தகவலின் படி வெடிக்கும் பட்டியணிந்த பயணி...
பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பூங்காவுக்கு அருகில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, குறித்த பூங்காவில் பல குடும்பங்கள் ஈஸ்டர் ஞாயிறு நிகழ்வுகளை கொண்டாடிக்...
போப் பாண்டவர் பிரான்ஸிஸ் முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் இந்து மத அகதிகளின் கால்களை கழுவி முத்தமிட்டதுடன் நாம் அனைவரும் ஒரே கடவுளின் குழந்தைகள் என தெரிவித்துள்ளார். ‘நாம் வேறுபட்ட பண்பாடுகள், மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆனால் நாம் சகோதரர்கள், நாம் அமைதியாக வாழ விரும்புகிறோம்’ எனவும் அவர் கூறியுள்ளார். பிரஸெல்ஸ் தாக்குதல்களுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு...
பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக 06 சந்தேக நபர்களை பொலிஸார் உடனடி கைது செய்துள்ளதாக வெளிநாட்டு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாயன்று பிரசெல்ஸ் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று தாக்குதல்களை நடாத்தினார்கள். இதில் 32 பேர் கொல்லப்பட்டதுடன் 250க்கும்...
தாய்லாந்தில் கை, கால் உடைந்து, தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்த வேளையில் பெண் ஒருவர், தன் 6 மாத மகனுக்கு தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. தாய்ப்பாசத்தை மிஞ்சிய விசயம் ஏதும் உலகத்தில் இல்லை. அதனை உறுதி செய்வது போல், தாய்லாந்து மருத்துவமனை ஒன்றில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது....
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் மூவரின் படத்தை வெளியிட்டுள்ள போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். பிரசல்ஸில் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் சிசிடிவி கேமராக்களின்...
பிரேசிலில் வீட்டின் மீது குட்டி விமானம் விழுந்து நொறுங்கி நேரிட்ட விபத்தில் தொழில் அதிபர், குடும்பத்துடன் பலி ஆனார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ரோஜர் ஆக்னெல்லி (வயது 56). அங்குள்ள சா பாவ்லோ நகரில் ஒரு சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்து, மிகப்பெரிய தொழில் அதிபராக உயர்ந்தார். ஒரு வங்கியாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர் பின்னாளில்...
துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம், ரஷ்யாவின் ரோஸ்டவ் நகரில் தரையிறங்கியபோது விபத்திற்குள்ளானது. அதில் பயணம் செய்த விமான ஊழியர்கள், பயணிகள் உள்ளிட்ட 59 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறைந்த வெளிச்சம் காரணமாக தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது கோடைகாலம் தொடங்கி விட்ட நிலையில் வெயில் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இது குறித்து அமெரிக்காவின் நாசாவின் விண்வெளி ஆய்வு கல்வி நிறுவனமான கட்டார்டு இன்ஸ்டியூட்டின் இயக்குனர் கவின் ஸ்மிட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த 100 ஆண்டுகளைகாட்டிலும் உலகில் பிப்ரவரி மாதத்தில்தான் கடும் வெயில் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில்...
தென்னாபிரிக்காவின் ஜொகனஸ்பேர்க் நகரில் வேகமாகப் பயணித்த கார் மோதி, இலங்கையர்களான கணவனும் மனைவியும் பலியாகினர். வேகமான பயணித்த கார், கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஹோட்டல் ஒன்றுக்கு சென்று விட்டு, நடைபாதையால் நடந்து சென்று கொண்டிருந்த இலங்கைத் தம்பதி மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஜொஹானஸ்பேர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரின் சாரதியும் இந்தச் சம்பவத்தில் பலியானார்.
கடும்பனிப் புகார் காரணமாக லண்டன் மிற்சம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில் நடுத்தர வயதுடையவரான சுகந்தி என்பவரே உயிரிழந்தவராவார். 'சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றும் இவர் 3 பிள்ளைகளின் தாயாராவார். பாதசாரிகளுக்கான நடைபாதையில் வீதியைக் கடந்த போது பஸ் குறுக்கிட்டதால் இவ்விபத்து...
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைப் பெண் உள்ளிட்ட நால்வருக்கு குவைத் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இலங்கைப் பெண் ஒருவர் மற்றும் மூன்று இந்தியர்களுக்கு, எதிராக நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குவைட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள்...
இ-மெயிலை நான் கண்டுபிடித்தேன், ஆனால் நிற துவேசம் காரணமாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழர் சிவா அய்யாதுரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி மற்றும் சில தமிழ் நிறுவனங்களும் புகழாரம்...
புறாவின் இறக்கையில் கட்டி கடிதம் அனுப்பியது, குதிரை வீரன் மூலம் தூது அனுப்பியது, பின்நாளில், லாந்தர் விளக்கை ஏந்தியபடி, இரவு-பகல் பாராமல் ஓயாது ஓடிய அரசுப் பணியாளர்கள் மூலம் தகவல் பரிமாறியது, பின்னர் தந்தி மற்றும் தபால் சேவையின் மூலம் அஞ்சல் அனுப்பியது உட்பட அத்தனை பழங்கால வழக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘இமெயில்’ எனப்படும்...
திரைப்படங்களில் வரும் நம்ப முடியாத செயல்கள் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு நிஜமாகி வருகின்றது. தற்சமயம் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இதை சாத்தியப்படுத்தும் முதல் ஆய்வில் வெற்றி கண்டுள்ளனர். கலிஃபோர்னியாவை சேர்ந்த ஹியூகஸ் ரிசர்ச் லபோரட்டரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களை வேகமாக படிக்க செய்யும் புதிய முறையை மனித மூளையில் நேரடியாக தகவல்களை வழங்கும் சிமுலேட்டர் ஒன்றை...
சுவிச்சர்லாந்தில் உள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கான சரியான தருணம் இதுவல்ல என்று சுவிட்சர்லாந்தில் உள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சுவிச்சர்லாந்திற்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்திருந்தார். மீண்டும் நாட்டிற்கு திரும்பி நாட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைக்குமாறும்,...
சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் விமான நிலையத்தில் இருந்து ரியாத்தில் உள்ள கிங்கலித் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் சென்று கொண்டு இருந்தது. விமானத்தில் 220 பயணிகள் பயணம் செய்தனர். விமானத்தை விமானி வலித் பின் முகமது அல்–முகமது ஓட்டி வந்தார். 34 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தது. கிங் கலித்...
துருக்கியில் 3 வயதுச் சிறுவன் அய்லான் உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்புக்குக் காரணமான அகதிகள் படகு விபத்து தொடர்பாக, 2 பேருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஏஜியன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது....
Loading posts...
All posts loaded
No more posts
