கடும்பனிப் புகார் காரணமாக லண்டன் மிற்சம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில் நடுத்தர வயதுடையவரான சுகந்தி என்பவரே உயிரிழந்தவராவார்.
‘சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றும் இவர் 3 பிள்ளைகளின் தாயாராவார். பாதசாரிகளுக்கான நடைபாதையில் வீதியைக் கடந்த போது பஸ் குறுக்கிட்டதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.