- Monday
- July 6th, 2026
கொழும்பை நோக்கிப் புறப்பட்ட சற்று நேரத்தில் ஸ்ரீலங்கன் விமானம் திடீரென மீண்டும் சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டமைக்கான காரணம் தெரியவந்துள்ளது. UL 309 என்ற ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரின் செங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 3 நிமிடங்களுக்குள் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து விமானத்தில் இருந்த மூன்று இலங்கையர்களை அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தினர்....
இலத்தீன் அமெரிக்க நாடான ஈக்குவடோரின் வடகிழக்கு பசுபிக் கரையோரத்தை சக்தி வாய்ந்த 7.8 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 233 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். பிரபஞ்சத்தில் பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர...
ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனவும் சிறீலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் இன அழிப்பிற்கான அனைத்துலக விசாரணையைக் கோருவோமென்றும் கனேடிய பழமைவாதக் கட்சி அறிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில் கனடியத் தமிழர் தேசிய அவையும்(NCCT) மற்றும் கனடாவில் தமிழர் பிரதேசங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் மார்க்கம், மிசிசாகா, பிராம்டன், ஆட்டாவாவைச் சேர்ந்த...
ஜப்பானில் நிலநடுக்கத்தில் பலியானவர்கள்எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானின் குமமோட்டோவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்தன. சில கட்டிடங்கள்...
பிரபல வணிக இணையத்தளமான இ-பேயில் (e-bay) பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விற்பனைக்கு விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவாஸ் ஷெரீப் தற்பொழுது கண் பரிசோதனைக்காக லண்டனில் தங்கியிருக்கும் நிலையில், அவரை விற்பனைக்கு விடுவதாக குறிப்பிட்ட இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது ஆரம்ப விற்பனை விலை 62 இலட்சமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, இந்தப்...
பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கை மக்களுக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் வகையில் அவர்களின் அனைத்து உறவினர்களையும் சந்தித்துக் கொள்வதன் பெறுமதியை தான் அறிந்து கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் மனித உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும்...
முழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதியப்பட்ட சின்ன சில்லு மூலம் அவரால் மீண்டும் தன் கைவிரல்களை அசைக்க முடிந்திருப்பது மருத்துவ உலகின் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த இயன் புர்கர்ட் செயலிழந்த தன் விரல்களால் தற்போது கிடாரை வாசிப்பதன் மூலம் கணினி விளையாட்டை விளையாடுகிறார். மூளை பாதிப்பு, பக்கவாதம், தண்டுவட பாதிப்பால்...
போரின்போதும் போருக்குப் பின்னரும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை சிறீலங்காவில் தொடர்கின்றது என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கடந்த புதன் கிழமை வெளியிடப்பட்ட ‘சிறீலங்காவுக்கான மனித உரிமை செயற்பாடுகள் – 2015’ அறிக்கையிலேயே இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்டியலிடப்பட்ட முக்கியமான பிரச்சனைகளில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுதல்,...
மியான்மர் நாட்டில் (பர்மா) வடமேற்கு பகுதியில் 7.0 அளவுள்ள கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்....
உலகில் கடந்த ஒரு நூற்றாண்டில் புலிகளின் எண்ணிக்கை முதல் முறையாக அதிகரித்துள்ளதாக சூழலியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 3 ஆயிரத்து 890 புலிகள் தற்போது வாழ்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச வனவிலங்கு நிதியம் மற்றும் உலகளாவிய புலிகள் மன்றம் ஆகியன கூறியுள்ளன. ஆயிரத்து 900 ஆண்டு ஒரு இலட்சமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010 ஆம்...
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை அறிந்து வைத்திருந்தமை குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது. இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய...
பங்களாதேஷ் பகுதியில் பேஸ்புக் இணையத்தளப் பக்கத்தில் மதத்துக்கு எதிரான தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்திய சட்ட மாணவர் ஒருவர் வெட்டுக் கத்தியால் வெட்டி புதன்கிழமை பின்னிரவு படுகொலை செய்யப்பட்டுள் ளார். நஸ்முதீன் சமாத் (26 வயது) என்ற மேற்படி சட்ட மாணவர் மதத் தலைவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பவ தினம் டாக்கா பல்கலைக்கழகத்துக்கு...
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தங்களை உளவு பார்த்தவர்களை ஐ.எஸ். அமைப்பினர் கொன்று சிலுவையில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ். அமைப்பினர் சமீப காலமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து தங்கள் அமைப்பு தொடர்பாக உளவு பார்ப்பவர்களை கொடூரமாக கொன்று வருகின்றனர். இந்நிலையில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக தங்களது...
விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர். வொஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கமே (International...
தற்போது ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலராக இருக்கும் பாங்கி மூனின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய இருக்கும் நிலையில் புதிய ஐக்கிய நாடுகளுக்கான செயலாளர் நாயகத்தைத் தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, நியூசிலாந்தின் முன்னாள் பிரதமரும், தற்போது ஐநா வில் மூன்றாவது முக்கிய பதவியில் இருப்பவரும், அபிவிருத்தித் திட்ட நிகழ்ச்சித்திட்டப் பொறுப்பாளராகவும் செயற்படும்...
உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் தொழில்நுட்பம் ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சி.சி.டிவியில் பதிவாகியுள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும். குற்றம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதற்கு இது உதவும் என இதனை உருவாக்கியுள்ள பிரிட்டனில் உள்ள ஈஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் கணிணி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இது...
உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி அவர்கள் பற்றி தெட்சணாமூர்த்தி அறக்கட்டளையின் ஆதரவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளி அம்ஷன்குமார் தயாரித்த ஆவணப்படமும் மற்றும் 'தெட்சணாமூர்த்தி: எட்டாவது உலக அதிசயம்'எனும் நூல் அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மார்ச் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ தூங்க்காபி சமூக...
கனடாவில் கிழக்கு கியூபெக் நகர் சென்ற தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக மகட்லான்ட் தீவில் தரையிறங்கியபோது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த கனடாவின் முன்னாள் அமைச்சர் உள்பட 7 பேர் பேர் உயிரிழந்தனர்.
ஈஜிப்ட் ஏர் விமானக் கடத்தலில் சிக்கிய அனைத்து பயணிகளும் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டது. லார்னகா விமானநிலையத்தில் ஒரு பதற்றமான நெருக்கடி நிலைக்குப் பின்னர் , விமானத்தைக் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். தனது கைகளைத் தூக்கியபடி விமானத்திலிருந்து வெளியே வந்த அவர், பின்னர் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளிடம் சரணடைந்தார். அதற்கு சில...
Loading posts...
All posts loaded
No more posts
