Ad Widget

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியான்மர் நாட்டில் (பர்மா) வடமேற்கு பகுதியில் 7.0 அளவுள்ள கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மியான்மரில் திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வட இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Related Posts