ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டது ஏன்?

கொழும்பை நோக்கிப் புறப்பட்ட சற்று நேரத்தில் ஸ்ரீலங்கன் விமானம் திடீரென மீண்டும் சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டமைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

UL 309 என்ற ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரின் செங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 3 நிமிடங்களுக்குள் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனை அடுத்து விமானத்தில் இருந்த மூன்று இலங்கையர்களை அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தினர்.

இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சீ.நிமல்சிறி, ‘விமானத்திற்குள் பயணியொருவர் எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டது.

அதன் பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்த போது அவை ஆபத்தானவை என இனங்காணப்பட்டுள்ளது. அழுத்த வாயுக்களே ஆபத்தான பொருட்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. பயணியொருவரிடம் விசாரித்த போது உணவை சூடாக்குவதற்காக அவற்றைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

சில பயணிகள் இவ்வாறான ஆபத்தான பொருட்களை தமது பயணப்பொதிகளுக்குள் வைத்திருந்தமையாலேயே விமானம் தரையிறக்கப்பட்டது. என தெரிவித்துள்ளார்.

Related Posts