Ad Widget

பேஸ்­புக்கில் மத எதிர்ப்புக் கருத்­து­களை வெளி­யிட்ட மாணவர் வெட்டிக் கொலை

பங்களாதேஷ் பகுதியில் பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில் மதத்­துக்கு எதி­ரான தனது கண்­ணோட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய சட்ட மாணவர் ஒருவர் வெட்டுக் கத்­தியால் வெட்டி புதன்­கி­ழமை பின்­னி­ரவு படு­கொலை செய்­யப்­பட்­டுள் ளார்.

நஸ்­முதீன் சமாத் (26 வயது) என்ற மேற்­படி சட்ட மாணவர் மதத் தலை­வர்­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் சம்­பவ தினம் டாக்கா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அரு­கி­லுள்ள சந்­தியில் சென்று கொண்­டி­ருந்த அவரை மோட்டார் சைக்­கிளில் வந்த 3 ஆயு­த­தா­ரிகள் நெருங்கி அவ­ரது தலையை கத்­தியால் வெட்­டிய பின் அவர் மீது துப்­பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.

இதன்­போது நஸ்­முதீன் சமாத் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ளார்.

ஜகன்னாத் பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்­டத் ­து­றையில் பட்ட கற்­கை­நெ­றியை கற்று வந்த அவர் தனது பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில் ‘எனக்கு மதம் கிடை­யாது’ என்ற தலைப்பின் கீழ் மத தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ரான கருத்­து­களை எழு­து­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­துள்ளார்.

இந்தத் தாக்­கு­த­லுக்கு இது­வரை எந்­த வொரு குழுவும் உரி­மை­கோ­ர­வில்லை. கடந்த வருடம் அந்­நாட்டில் மதச் சார்பற்ற 4 இணையத்தள எழுத்தாளர்கள் மத கடும் போக்காளர்களால் வெட்டிக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts