Ad Widget

பிரசெல்ஸ் தாக்குதல் – 06 பேர் கைது!

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக 06 சந்தேக நபர்களை பொலிஸார் உடனடி கைது செய்துள்ளதாக வெளிநாட்டு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாயன்று பிரசெல்ஸ் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று தாக்குதல்களை நடாத்தினார்கள். இதில் 32 பேர் கொல்லப்பட்டதுடன் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடைபெற்று முடிந்தவுடன் இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பி தலைமறைவாக இருந்தமை பொலிஸாருக்கு தகவல் மூலம் தெரிய வந்தது. இத் தகவலை தொடர்ந்து நகரிலுள்ள அனைத்து வீடுகளிலும் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இச்சோதனையின் முடிவில் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 06 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts