கிளிநொச்சி- முல்லைத்தீவு விசேட கல்வி வலயமாக பிரகடனம்

கிளிநொச்சி- முல்லைத்தீவு விசேட கல்வி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் யாழ் விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் குறித்த மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் அவற்றின் உட்கட்டுமான அமைப்புக்களை மேம்படுத்தவுள்ளது. சிவில் பாதுகாப்புப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பரீட்சை வைக்கப்பட்டு பின்னர்...

ஆட்பதிவுத் திணைக்களம் துரித சேவை ஒன்றை அறிமுகம் செய்கின்றது

உங்கள் விண்ணப்பப்படிவத்திற்கான அடையாள அட்டையை அவசரமாக பெற்றுக் கொடுப்பதற்கு, ஆட்பதிவுத் திணைக்களம் துரித சேவை ஒன்றை அறிமுகம் செய்கின்றது
Ad Widget

போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்ற யாழ்.இளைஞன் கைது

போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி துருக்கியிலிருந்து தரைவழியூடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான இளைஞன், நாடு கடத்தப்பட்டுள்ளார். துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்ட அந்த இளைஞனை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். அவர் தனது செல்லுபடியான கடவுச்சீட்டை பயன்படுத்தி தமிழ்-சிங்கள புத்தாண்டு தினமான கடந்த 14ஆம் திகதி,...

முஸ்லிம் பிரதிநிதிகள் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (17) வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கு இதுவரை காலமும் எவ்வித உதவிகளும் முன்னைய அரசாங்கத்தால் வழங்கப்படவில்லையெனவும், மீள்குடியேறிய மக்களுக்கு காணிப்பிரச்சினை, வீட்டுத்திட்டத்தில் புறக்கணிப்பு, தொழில் வாய்ப்புக்கள் இன்மை உள்ளிட்ட நிறைய பிரச்சினைகள் இருப்பதாக...

இம்மாதம் 30 தொடக்கம் மே 6 வரை வெசக் வாரமாக பிரகடனம்

ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி தொடக்கம் மே 6ஆம் திகதி வரை வெசக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அரச நிர்வாக- மாகாணசபை மற்றும் ஜனநாயக நல்லாட்சி தொடர்பான அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அத்துடன் மே மாதம் 3ஆம் 4ஆம் திகதிகளை வெசக் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேசிய வெசக் உற்சவத்தை மஹியங்கன ரஜ மகா விகாரையில்...

திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறப்பு

இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை, இன்று வெள்ளிக்கிழமை (17)காலை 10.15க்கு, பின்னவல பிரதேசத்தில் திறந்துவைக்கப்பட்டது. பின்னவல யானைகள் சரணாலயத்தை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மிருகக்காட்சிசாலையே, இலங்கையின் இரண்டாவது மிருகக்காட்சிசாலையும் ஆகும். மிருகங்களை கூண்டுகளில் அடைத்து காட்சிப்படுத்தும் கொள்கையிலிருந்து மாறுபட்ட நிலையில், சுதந்திரமாக மிருகங்கள் நடமாடக்கூடிய வகையில் இந்த மிருகக்காட்சிசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த மிருகக்காட்சிசாலையின் நிர்மாணப் பணிகளின்...

எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை தமிழ் மக்கள் வெளியிட வேண்டும் – முதலமைச்சர் சி.வி

புலம்பெயர், உள்நாட்டு தமிழ் பேசும் மக்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் 75ஆவது அகவைப் பூர்த்தி நிகழ்வு மன்னார் ஆயரின் வாசஸ்தலத்தில்...

இந்திய மீனவர்கள் 37 பேருக்கும் தொடர்ந்தும் மறியல்

எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்ட்ட 37 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த 4 ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்துக் இலங்கைக் கடற்படையினரால் 5 படகுகளில் வந்த 37...

இந்திய மீனவர்களை சுடுவோம் என ரணில் கூறியது பகிடிக்காகவே!

"இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசித்தால் சுடப்படுவார்கள்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியது பகிடிக்காகவே என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இதனை மக்கள் சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். செய்தியாளர்கள், ரணில் விக்ரமசிங்கவை குழப்பும்...

ராமேஸ்வரம் அருகே மர்மப்படகு – இலங்கை கடத்தல்காரர்கள் ஊடுருவலா?

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரையில் ஒதுங்கிய மர்மப்படகில், இலங்கையைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ´கியூ´ பிரிவு பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தங்கச்சிமடம் கண்ணுபாடு கடற்கரையில் நேற்று 20 அடி நீளமுள்ள ஒரு மர்மப்படகு ஒதுங்கி நின்றது. அதில் வந்த கடத்தல்காரர்கள் 4 பேர் தங்க கட்டிகளுடன் ஊடுருவி இருக்கலாம், என கிடைத்த...

தன்னம்பிக்கையுடனும், முயற்சிடனும் செயற்பட்டால் வாழ்வில் வெற்றி பெறுவது இலகு

வடமாகாணம் போரினால் பாதிக்கப்பட்டதால் பல தொழிற்சாலைகளை மீளவும் அரம்பிக்க முடியாமல் உள்ளது.இதனால் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கிராமப் புற பெண்களை தொழில் முனைவோராக மேம்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், கடந்த 30 வருடங்களுக்கு...

தகிக்கும் தண்ணீர் ஆவணப்படம் இன்று வெளியீடு!

வலிகாமம் பகுதியில் கிணற்று நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் தயாரிக்கப்பட்ட "சுன்னாகம்: தகிக்கும் தண்ணீர்" ஆவணப்படம் வெளியிடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சுன்னாகம் கதிரமலை சிவன்கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்புரையை மருத்துவர் முரளி வல்லிபுரநாதன், மருத்துவர் பி.குமரேந்திரன் ஆகியோர் நிகழ்த்துவர்.

வடக்கு அமைச்சு செயலாளர்கள் உட்பட ஆறு பேரின் இடமாற்றம் 27 இல் நடைமுறைக்கு!

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட ஆறு செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி இந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று முன்னர் அறிவிக்கப்பட்டு, மீண்டும்...

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டி! எவரிடமும் பேச நாம் தயாரில்லை!!

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும்” என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- எவரிடமும் பேசுவதற்கு நாம் தயாரில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தனித்தே போட்டியிடுவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை ஒரு நாளும் வெற்றியளிகாது. அதிகாரங்கள் பங்கிடப்பட்டாலும்...

சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தத் தவறினால் மீண்டும் பூச்சிய நிலைக்கே செல்லவேண்டிய நிலை ஏற்படும்!

சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் நாம் பூச்சிய நிலைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். நேற்று வியாழக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்...

மீள்குடியேற்றத்துக்கு தடையாக இராணுவ முகாம்கள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் மூன்றாம் கட்டமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் 100 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டிருக்கின்ற இரண்டு இராணுவ முகாம்களையும் அகற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது. இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பொதுமக்களுடைய வாழ்விடமாகிய வலிகாமம் வடக்கின் 6400 ஏக்கர்...

புதிய கட்சி தொடங்குகிறார் ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச!

ஜே.வி.பி. மீது அதிருப்தி கொண்டுள்ள தாம் தன்னைப் போன்ற அதிருப்தியாளர்களை இணைத்துப் புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அக்கட்சியின் முன்னாள் தலைவரான சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை ஊடகவிலாளர்களை சந்தித்த சோமவன்ச தாம் கட்சியிலிருந்து விலகுகிறார் எனத் தெரிவித்த போதே புதிய கட்சி குறித்தும் கருத்து வெளியிட்டார். ஜே.வி.பியின் தற்போதைய கொள்கைகள் மக்களுக்குப் பிடிக்கவில்லை...

சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை நிறுத்துங்கள்! இல்லையேல் புதிய கட்சி!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் 60இற்கு மேற்பட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நேற்று தங்காலையில் கார்ல்டன் வீட்டில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல, சாலிந்த திஸாநாயக்க, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ஸ, டீ.பி.ஏக்கநாயக்க, ஜி.எல்.பீரிஸ், மஹிந்தானந்த அலுத்கமகே, காமினி...

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை சுரேஷ் பிரேமசந்திரன் நேரில் சென்று பார்வை!

வலி. வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். கடந்த 25 வருடகாலமாக 6 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தது. அதில் கடந்த 11 ஆம் திகதி 590 ஏக்கர்...

கைதடி பகுதியை சேர்ந்த இளைஞன் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் பலி!

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனா். இச் சம்பவம் நேற்று(16) வியாழக்கிழமை முற்பகல் இடம் பெற்றுள்ளது. மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் நண்பா் வீட்டிற்கு வந்த வேளையில் தனது நண்பரோடு நீராடச் சென்றுள்ளார். அதன் பின் தனது நண்பன் நீராடி கொண்டிருக்கும் வேளையில் தீடிரென காணாமல்...
Loading posts...

All posts loaded

No more posts