Ad Widget

சட்டமும், நீதியும் பணத்துக்கு விலை போகுமோ? : கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மாணவிக்கு நீதி கோரியும் கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் இன்று கண்டன போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரிக்கு முன்பாகவே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு மானம் போக்கிய மானிடரை மன்னிக்காதே, தண்டனையை தயங்காமல் வழங்கு தப்பினால் நம் தாய்மண் சீரழியும்,எவனும் குற்றம் செய்து நீதியின் பிடியில் தப்பலாம்.ஆனால் மக்கள்,மாணவர் பிடியிலிருந்து தப்ப முடியாது, சட்டமும் நீதியும் பணத்துக்கு விலை போகுமோ என்று எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்னர்.

Related Posts