Ad Widget

யாழ்ப்பாணம் வழமைக்கு திரும்பவில்லை!, தொடர்கிறது பாதுகாப்பு

யாழ். நகர் மற்றும் நீதிமன்ற சூழலிலும் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் தொடர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இடம்பெற்ற வன்முறையினை அடுத்து இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் 127 பேர் நேற்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர் என்றும் வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் புங்குடுதீவு சிறுமியின் படுகொலையுடன் தொடரபுடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஊர்காவற்றுறையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் கொழும்பு வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்ட நபரும் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts