Ad Widget

மாணவி படுகொலை: சந்தேகநபர்களுக்கு ஜூன் 1ஆம் திகதி வரை விளக்கமறியல்

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், மாணவி படுகொலை சம்பவம் தொடர்பில் முதலில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்ற அனுமதியுடன் 48 மணிநேர பொலிஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

இதன்பின்னர், குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் புதன்கிழமை(21) ஆஜர்ப்படுத்தியதுடன் நீதிமன்ற உத்தரவின்பேரில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Related Posts