யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து வவுனியாவில் இன்று பூரண கடையடைப்பு நடைபெறுகின்றது.
வவுனியா நகரப் பகுதி வெறிச்சோடிக் காணப்படும் அதேவேளை பரவலாக பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
நகருக்கு வரும் சில வீதிகளில் ரயர்கள் போட்டு எரியூட்டப்பட்டுள்ளது. வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நகரப் பகுதியில் அமைதியான முறையில் நடைபெறவிருந்த போராட்டத்துக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை.
இதேவேளை, பாடசாலைகள், வங்கிகள், அரச திணைக்களங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டிகளும் தனியார் பஸ்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.