Ad Widget

ஊடகவியலாளர் உள்ளிட்ட நால்வர் கைதாகி விடுதலை!

வவுனியாவில் இடம்பெற்ற ஹர்த்தால் நடவடிக்கையை புகைப்படம் பிடித்த ஊடகவியலாளர் உள்ளிட்ட நால்வர் இன்று வியாழக்கிழமை வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இரண்டு மணிநேரத்தின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வித்தியா படுகொலைக்கு நீதி கோரி வவுனியாவில் ஹர்த்தால் இடம்பெற்று வருகின்றது. இதன்போது திருநாவற்குளம் பகுதியில் உள்ள பிரதான வீதியில் சிலர் ரயர்களைப் போட்டு எரித்து போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தினர். இதனை அப்பகுதிக்கு சென்ற பத்திரிகை ஒன்றின் பிராந்திய ஊடகவியலாளர் மற்றும் அப்பகுதியால் வந்த மூன்று இளைஞர்கள் புகைப்படம் பிடித்தனர் எனத் தெரிவித்து அவர்களை வவுனியா பொலிஸார் கைதுசெய்தனர்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் ஆகியோர் பொலிஸாருடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து இரு மணி நேரத்தின் பின்னர் அவர்கள் நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Posts