- Thursday
- September 18th, 2025

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த மணியம் விதுசா (வயது 16) என்ற மாணவியை கடந்த 28ஆம் திகதி முதல் காணவில்லை என மாணவியின் பெற்றோர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (30) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஊற்றுப்புலத்திலுள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி நகரிலுள்ள தனது தாயார் பணி செய்யும் சிறுவர் இல்லத்துக்கு...

நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை (29) இரவு அத்துமீறி நுழைந்த குழு, இளைஞன் மீது வாள்வெட்டினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் எஸ்.சசிகரன் என்பவர் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் வந்த மூன்று பேர் கொண்ட குழு, இத் தாக்குதலை...

வீதியால் சென்று கொண்டிருந்த யாழ். மாநகரசபைக்குச் சொந்தமான குடிதண்ணீர் பெளஸர் ஒன்று திடீரென்று டிராக்டரை விட்டுக் கழன்று தடம்புரண்டது. ஏ9 வீதியில் பஸ்ரியன் சந்திக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. பெளஸர் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் வீதியால் சென்ற வயோதிபர் ஒருவர் காயமடைந்தார். அத்துடன் அருகில் இருந்த வர்த்தக நிலையத்தின் பொருள்கள் சிலவும்...

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்;குட்பட்ட கிராமமான 2ஆம் கட்டை கோரக்கன்கட்டு என்னுமிடத்தில் வசிக்கும் சிறுமியாருவர், வெள்ளிக்கிழமை (29) மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கோரக்கன்கட்டு குடியிருப்பு என்னுமிடத்தில் வசிக்கும் இராசையா கமலேஸ்வரி (வயது 13) எனும் சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி காலையிலிருந்து காணாமற்போயிருந்த நிலையில், அவரின்...

யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் பதவி உயர்வால் வடமாகாண பொதுநிர்வாக ஆணைக்குழுவுக்கு மாற்றமாகி செல்லவுள்ளார். அதன்படி யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக கடமையாற்றி வந்த ரூபினி வரதலிங்கத்தின் இடத்திற்கு புதிதாக நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனன் நியமிக்கப்படவுள்ளார். இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை புதிதாக யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக நல்லூர் பிரதேச...

வடக்கு மாகாண கூட்டுறவுப் பணியாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு எமது அமைச்சால் 100 நாள் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் அங்கமாக கூட்டுறவு பணியாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்...

தொடர்ச்சியான இராணுவ பிரசன்னம் தமிழ் மக்களுக்கு மிக மோசமான ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வடக்குக்கு நீர் வழங்குதல் என்ற போர்வையில் வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதும் தீவிரமான ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இது குடிப்பரம்பலை பெரிதும் பாதிக்கிறது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையின் வடக்கு,...

இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மதகுருமார்களுக்கிடையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட பிரித்தானிய அரசாங்கம் மத்தியஸ்தம் வகிப்பது தொடர்பில் அரசுடன் கதைப்பதாக இலங்கை மாலைதீவு ஆகியவற்றுக்கான உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்தார். பிரித்தானிய இலங்கை மாலைதீவுகளுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை (29) விஜயம் செய்து நல்லைக் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிய ஞானசம்பந்த...

வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்புணர்வுகள் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியொன்று, புன்னாலைக்கட்டுவன் சந்தியில் இருந்து பாடசாலை முன்றல் வரையில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது. பாடசாலை அதிபர் வி.ரி.ஜெயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் வித்தியாலய ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர். பெண்கள், சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வை...

போலி கடவுச்சீட்டு மற்றும் போலி விசாக்கள் 50யை எடுத்துகொண்டு இங்கிலாந்துக்கு செல்வதற்காக வருகைதந்த இலங்கை பெண்ணை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக விமான நிலை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதான யுவதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர், இலங்கை விமான சேவைக்கு சொந்தான யு.எல்.503 விமானத்தில் இங்கிலாந்துக்கு...

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் சம்பந்தமாக இராணுவத்தின் உயரதிகாரிகளிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்திவருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்துலக மட்டத்தில் போர்க்குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவரும், அண்மையில் அரசால் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸிடம் உள்ளக விசாரணைக்குழு வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளது. போரின்...

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடிய கவனம் செலுத்துவதாகவும், வெகுவிரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான அறிக்கையை வெகுவிரைவில் அமைச்சரவையில் சமர்ப்பித்து கைதிகளை விடுவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்....

இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோகீன் தலைமையில் நோர்வே நீரியல் நிபுணர்கள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29.05.2015) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். வடமாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அழைப்பின் பேரில், இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அண்மையில் சுன்னாகம் பகுதியில் தரையை ஊடுரும் றேடாரைப் பயன்படுத்தி ஆய்வுகளை...

வடமாகாணத்தில் தற்போது 100 வீதம் சமாதானம் காக்கப்படுவதாகவும் அதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட பிரத பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். தலைமை பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் மேலும் ஐவர் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர். லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் பண்டு பண்டாரநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஹேமால் குணசேகர ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாகவும் சந்திரிசிறி சூரியாராச்சி பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிபிரமாணம்...

தனியாக யாழ்ப்பாணத்துக்கு வந்து வித்தியாவின் தாயரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராட்டுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெள்ளிக்கிழமை (29) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாடசாலைக்கு சென்ற 17 வயது மாணவி வித்தியா கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அப்பாவி...

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் சட்டத்தை மதிக்காத சிறு குழுவொன்று செயற்படுகின்றது என வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், புங்குடுதீவில் மாணவி படுகொலை...

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலைச் சம்பவத்தின் பின்னர் யாழ். நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது, யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிலர்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்துக்கு வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு விருப்பமில்லை என்று அமெரிக்காவிலுள்ள ஒக்லான்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. அதேபோல அவ்விரு மாகாணங்களிலும் சிவில் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை...

வடக்கில் மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண சம்பவமாக கணிக்க முடியாது. மாணவியை சீரழித்து அதனை ஒளிப்பதிவு செய்து சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே நடந்தேறியுள்ளது. எனவே இதற்கு விசேட நீதிமன்றம் அமைக்கவேண்டியது அவசியமாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். முதலில் இந்தியாவில் இவ்வாறு திட்டமிட்ட வியாபாரமாக...

All posts loaded
No more posts