Ad Widget

வடக்கில் சுத்தமான நீரைப் பெற்றுக் கொடுக்க சீன நிறுவனங்கள் நிதி

வட பகுதிக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், கிணறுகளை அமைக்க, சீன நிறுவனங்கள் இரண்டு முன்வந்துள்ளன.

குறித்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இதற்காக சுமார் 14,000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

இதன்படி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஐந்து குடிநீர் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts