Ad Widget

கொக்குவில் பாடசாலையில் போதைப் பொருள்: சந்தேகத்தில் ஒருவர் கைது!

கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து ஒரு தொகுதி போதைப் பாக்கு கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை தரம் ஏழு மாணவர்கள் இந்த போதைப் பாக்கை எடுத்து பாடசாலை அதிபரிடம் கையளித்துள்ளார்கள்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் உயர்தரத்தில் கல்விகற்கும், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் பாடசாலையில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டார்கள்.

அத்துடன் சிறுவர் பாதுகாப்பு திணைக்கள அலுவலர்கள் நல்லூர் கல்விக் கோட்ட கல்விப் பணிப்பாளர் மற்றும் அலுவலர்களும் குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமாக விசாரணைகளை மேற் கொண்டனர்.

குறிப்பிட்ட பாடசாலையில் போதைப் பாக்கு விநியோகம் செய்யப்பட்டமை சம்பந்தமாக பாடசாலைக்கு அருகில் உள்ள ஒருவர் பொலிஸாரினால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை – இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரிககச் சென்ற ஊடகவியலாளர்களை பாடசாலை அதிபர் செய்தி சேகரிக்க அனுமதிக்கவில்லை என்றும் இது தொடர்பாக தகவல்களை வழங்க அவர் மறுத்தார் என்றும் ஊடகவியலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Posts