Ad Widget

ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பது எமது கடமை – சம்பந்தன்

இலங்­கையில் காணாமல் போன­வர்கள் தொடர்­பி­லான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையில் ஒரு­வ­ருக்கும் நம்­பிக்­கை­யில்­லா­விட்­டாலும், அதில் தமது முறைப்­பாட்டை பதிவு செய்­வது கடமை என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். இலங்கை வந்­தி­ருக்கும் இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவ­ராஜை சனிக்­கி­ழ­மை­யன்று சந்­தித்துப் பேசி­யது குறித்து, பி.பி.­சிக்கு அளித்த பிரத்­யேக செவ்­வி­யின்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்....

கிராமப்புற உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு வசதி இல்லை

கிளிநொச்சி மாவட்டத்தின் பின் தங்கிய கிராமங்களில் உள்ள குடும்பங்கள் தமது வருமானத்தின் பொருட்டு மேற்கொண்டு வரும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை உரிய முறைகளில் சந்தைப்படுத்த முடியாதுள்ளதாக கூறுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீள்குடியேறி வாழ்ந்து வரும் குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு குடிசைக் கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது உற்பத்தி...
Ad Widget

வடமாகாணத்துக்கு புதிதாக 31 பேருந்துகள்

வடமாகாணத்துக்கு புதிதாக 31 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸ்வர் சனிக்கிழமை (07) தெரிவித்தார். 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்த பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அவை முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், காரைநகர், கிளிநொச்சி, பருத்தித்துறை சாலைகளுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளன. இவற்றை கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 13, 14ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும்...

வடபகுதி ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை

வடபகுதி ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தென்னிலங்கை ஊடகவியலாளர் அமைப்பு சனிக்கிழமை (07) தெரிவித்துள்ளது. தென்னிலங்கை ஊடகவியலாளர் யாழ். ஊடக அமையத்தில் வடபகுதி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, அவ்வமைப்பின் ஊடகவியலாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 'வடபகுதியில் கொலை செய்யப்பட்ட காணாமல் போன மற்றும் அச்சுறுத்தப்பட்ட...

காரைநகரில் புதிய பஸ்தரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

காரைநகர் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்காக கையளித்தார். காரைநகருக்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் அவர்கள் குறித்த பஸ்தரிப்பு நிலையங்களை நேற்று (08) திறந்து வைத்தார். முன்னதாக வலந்தலை சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் திறந்து...

விதவைகளை மறுமணம் செய்ய இளைஞர்களே முன்வாருங்கள் – மாவை எம்.பி

இளம் விதவைகளை மறுமணம் செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். விதவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கும் இதுவே சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்தார். யாழ்.நகரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை...

மகனைக் கொன்ற யானைகளுக்கே விளைச்சலை தானம் செய்த விவசாயி

கிராமங்களில் மண்ணையும் மரங்களையும் நேசித்து இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கும் இறுதி ஆசைகள் உண்டு. ஆனால் அந்த ஆசைகளும் இயற்கையோடு ஒட்டியே பெரும்பாலும் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் மத்திய மாகாணம், தம்புள்ளை நகருக்கு அருகே இருக்கின்ற சீகிரிய பிரதேசத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கின்றது உடவலயாகம என்ற விவசாயக் கிராமம். இங்கு மண்ணையும் மழையையும் நம்பி வாழ்க்கை...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில்

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு ஆட்சிமாற்றம் நடந்துள்ள சூழ்நிலையில், புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். எலிசபெத் மகாராணியின் தலைமையின் கீழ் இருக்கின்ற காமன்வெல்த் அமைப்பின் தற்போதைய நிர்வாகத் தலைவரான இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக...

பெண்ணியம் தமிழ்த்தேசியத்தால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது

இலங்கைக்கு உள்ளும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த்தேசியக் கருத்தாக்கம் பெண்ணியத்தை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறுகிறார் ஈழத்தின் பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம். இந்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவில் கொல்லப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்திய அரசால் தடுக்கப்பட்ட சர்ச்சை தொடரும் பின்னணியில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஈழத்தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்கார பிரச்சனைகள் குறித்து பிபிசி...

மூன்று நாள்களாக தொடர்ந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு

காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும் ஐ.நா நீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகலுடன் முடிவடைந்தது. கடந்த மூன்று நாள்களாக இடம்பெற்று வந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகல் நீராகாரத்துடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இதேவேளை...

யாழ். மத்தியின் ‘சென்றல் நைட்’ வருடாந்த ஒன்றுகூடல்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 'சென்றல் நைட்' வருடாந்த ஒன்றுகூடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலானது நேற்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின்...

அரசியல் மாற்றத்தை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை -டக்ளஸ்

புதிய அரசு அமைந்ததும் நிறைவேற்று சபையொன்றை அமைத்து தமிழ் மக்களது பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று கூறியவர்கள் இப்போது தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கத்துவமாக இருந்து கொண்டும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வாய்திறக்காமலே இருப்பதை நாம் கண்டிக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். 'உண்மையான...

நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள்

வடக்கு மாகாணம் பல வழிகளிலும் நலிவடைந்துள்ள நிலையில் நிதி நிறுவனங்களின் வருகையினால் பொருளாதார நிலையில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் துறை விரிவுரையாளர் இ. இரட்ணம் தெரிவித்தார். யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் வாழ்நாள் கூட்டுறவாளருமான வீ.கே அருந்தவநாதனின் சேவைநலன்பாராட்டு விழாவும் புதிய ஆணையாளரை வரவேற்கின்ற நிகழ்வும் வடமாகாண பனை ,...

உணவு தவிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது

காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரியும் நீதியான சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்றும் வலியுறுத்தி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 2ஆம் நாளாக நேற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது. காணாமல் போனோரின் அமைப்புக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதற்குப் பல அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன்போது கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல்...

இணைந்த வடக்கு கிழக்கில் தீர்வுகாண இந்தியா உதவ வேண்டும்

இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேச்சு நடத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள், இனப்பிரச்சனைக்கு வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு காண்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர...

கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தர மாட்டோம்-எல்லை தாண்டினால் சுட்டுக் கொல்வோம் – ரணில்

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம், எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மிரட்டியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இந்திய-இலங்கை உறவை, சீன-இலங்கை உறவில் இருந்து வேறுபடுத்தியே வைத்திருக்கிறோம். இரண்டும் எங்களுக்கு முக்கியமானவை. இந்தியாவுடன் எங்களுக்கு வரலாற்று உறவு உள்ளது. இந்திய-இலங்கை...

சிகிரியா சுவரில் எனது மகள் தெரியாமல் எழுதிவிட்டால் பொது மன்னிப்பு வழங்குங்கள் – தாய் மன்றாட்டம்

சிகிரியாவில் உள்ள சுவரில் எனது மகள் தெரியாமல் எழுதிவிட்டால் அவளுக்கு அதில் எழுதக் கூடாது என்பது தெரியாது தெரியாமல் செய்த எனது மகளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? எப்படியாவது எனது மகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் என உதயசிறியின் தாய் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். “உதயா” என தனது பெயரை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்ட மட்டக்களப்பு சித்தாண்டியைச்...

விபத்து: ஒருவர் பலி, ஐவர் படுகாயம்

முல்லைத்தீவு, முறிகண்டி செல்வபுரம் பகுதியில் சனிக்கிழமை (07) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளை பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்றே குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் லொறியில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன், சாரதி...

மீண்டும் மக்கள் காணிகள் சுவீகரிப்பு

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த காலங்களில் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்குச் சொந்தமான 11 யஹக்ரேயர் காணி சுவீகரிக்கப் பட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளு மாறு, யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். மருதங்கேணி...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் திகதி 31 வரை நீடிப்பு

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பப்பத்திரம் ஏற்றுக் கொள்ளும் இறுதித் தினம் இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் தினம் நேற்றுடன் (6) முடிவடையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
Loading posts...

All posts loaded

No more posts