Ad Widget

தெல்லிப்பளை ஓ.ஐ.சி பணியிலிருந்து இடைநிறுத்தம்

தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.என்.எஸ்.கஸ்தூரியாரச்சி, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை பணியிலிருந்து இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் பணிப்புரைக்கு அமைய புதன்கிழமை (15) நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அவரின் பதவிகள் மற்றும் அதிகாரங்கள் யாவும் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ.ஜயசிங்கவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரி நியமிக்கப்படும் வரை, குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஏ.டி.எல்.விக்கிரமாரச்சி பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுவார் என வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts