Ad Widget

யாழ். நீதிமன்றத் தாக்குதல்: 30 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில், ஒருவர் பிணையில்

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, 30 சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறும், யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 31 சந்தேகநபர்கள், நேற்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, பாடசாலை மாணவர் ஒருவர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சந்தேகநபரை ஞாயிறு தினங்களில் யாழ். பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய 30 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts