Ad Widget

யாழில் வங்கி வேலை வாய்ப்புக்காக வெயிலில் தவம் கிடக்கும் பட்டதாரிகள்

யாழ்ப்பாணம் மட்டுமல்ல இலங்கை முழுவதும் வேலை இல்லாத இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்து வருகின்றது.

இதன் காரணமாக இளைய சமுதாயத்தினர் மத்தியில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறுகிறது பொலிஸ் குற்றப் பிரிவின் அறிக்கை ஒன்று.

படித்துப் பட்டம் பெற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை உரிய முறையில் பெற்றுக் கொடுக்க பதவியில் உள்ள அரசியல்வாதிகளும் தயாரில்லை.

அரசாங்கத்துக்கும் இது தொடர்பில் அக்கறையில்லாமல் இருக்கிறது.

இடைக்கிடை உடனடி வேலைவாய்ப்பு முகாம் விளம்பரங்கள், பட்டதாரிகள் உடனடியாக பிரதேசசபையில் தங்கள் பெயர்களை பதிவு செய்யும் அறிவித்தல்கள் தேர்தல் விளம்பரங்களாக வந்து செல்கின்றதோ ஒழிய யாருக்கும் வேலை கிடைத்ததாக எந்தப் பதிவும் இல்லை.

ஆனால், சொற்ப வேலை விண்ணப்பங்களுக்காக ஐநூறுக்கும் மேற்பட்ட படித்த இளைஞர் யுவதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன் உள்ள வங்கி ஒன்றின் முன்பு வெயிலுக்கு மத்தியில் மூன்று மணித்தியாலங்களாக வரிசையில் நின்ற காட்சியே இதுவாகும்.

bank-inter-view

Related Posts